பட்டுப்பூச்சி
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பட்டுப்புழு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பட்டுப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியானது 6-8 வாரங்களில் முடிவடைந்துவிடும். இப்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பார்கள்.
உடல் அமைப்பு தொகு
பட்டுப்பூச்சி வெளிறிய நிறத்தில், சுமார் 2.5. செ.மீ நீளத்திலும் ,மிகவும் சோர்வாகவும் காணப்படும். அவற்றின் உடல்பாகம் நல்ல தடிமனாகவும், இறக்கைகள் பலவீனமாகவும் இருப்பதால் இவற்றால் பறக்கமுடிவதில்லை.
வளர்ச்சி நிலைகள் தொகு
ஒரு பெண் பட்டுப்பூச்சி 300-400 வரை பழுப்பு கலந்த வெண்மை நிற, கோள வடிவிலான முட்டைகளை குவியலாக இடும். அதன் பிறகு இப்பூச்சிகள் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்.[1] முட்டைகளில் இருந்து 8-12 நாட்களில் சுமார் 3 மி.மீ. நீளமுள்ள, கருமை நிறம் கொண்ட இளம் புழுக்கள் வெளிவரும். அவை வளர்ச்சியடையும் போது 4 முறை தோல் உரிக்கும்.முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் சுமார் 5 செ.மீ. நீளத்திலும், உருளை வடிவத்திலும், மஞ்சள் கலந்த வெண்மை நிறத்திலும் காணப்படும். புழுப்பருவம் 30-40 நாட்கள் வரை நீடிக்கும்.[2] முழு வளர்ச்சியடைந்த புழு தொடர்ச்சியான ஒரே பட்டு நூல் இழையினால் நீள்வட்ட வடிவில் கூடு கட்டி அதனுள் கூட்டுப்புழுவாக மாறும். கூடு கட்டி முடிக்க 1 அல்லது 2 நாட்கள் ஆகும். குக்கூன் என்று அழைக்கப்படும் கூடு வெண்மை நிறத்தில் இருக்கும். கூட்டுப்புழுவில் இருந்து 10-12 நாட்களில் பட்டுப்பூச்சி வெளிவரும். பட்டுப்பூச்சியின் வாழ்க்கை 6-8 வாரங்களில் முடிவடைந்து விடும்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-05.