பன்னிரண்டாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

பன்னிரண்டாம் நாளன்று அருச்சுனனை வீழ்த்த செய்த கௌரவர் படைகளின் செயல்களைக் காணலாம்.

அருச்சுனனின் மீது கோபம் தொகு

தருமரை பிடிக்க தாம் போடும் திட்டங்கள் யாவும் அருச்சுனன் இருப்பின் கைகூடாது என கௌரவர் படைகள் அறிந்தன. எனவே அருச்சுனனை எப்படியாவது தன் வழியிலிருந்து நீக்க வேண்டும் என விரும்பினர்.

சுசர்மனின் சபதம் தொகு

இந்நிலையில் திகர்த்த தேசத்தை சார்ந்த சுசர்மன் என்பவனும், அவனது 3 சகோதரர்களும், 35 மகன்களும் அருச்சுனனை அழிப்போம், அல்லது போரிட்டு அழிவோம் என்று சூளுரைத்து அருச்சுனனை தாக்கினர்.

சகோதரர்களின் இறப்பு தொகு

வீரத்துடன் போரிட்ட அருச்சுனின் தாக்குதலை தாங்க இயலாமல் சகோதரர்கள் இறந்தனர்.

துரோணரின் திட்டம் தொகு

துரோணர் தொடர்ந்து தருமனை சிறை பிடிக்க முயன்றும் இயலாமல் போனதோடு மட்டுமின்றி, பாண்டவர் படைகள் மிகத் தீவிரமாக போரிட்டு கௌரவர் படைகளில் பலத்த சேதத்தினை செய்தனர்.