எட்டியலூர் திருவாரூர்
எட்டியலூர் சில தகவல்கள் ,
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் வடகண்டம் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமம் எட்டியலூர் . பேச்சு வாக்கில் சொல்லும் ஊரின் மொத்த அளவு 32 வேலி ( ஒரு வேலி = 20 ௦ மா , 3 மா = ஒரு ஏக்கர் ) பக்கத்தில் இருக்கும் தியாகராஜாபுரம் அரசு விதைப் பண்ணையின் அளவும் இவ்வளவே . எட்டிய லூர் நில அளவுகள், ஊர் மக்கள் எண்ணிக்கை சமபந்த மான அரசு பூர்வ தகவல் களை விரைவில் பகிர்கிறேன்.
முக்கிய தொழில் ; விவசாயம்
வீடுகளின் எண்ணிக்கை : 300 ( அனுமானமாய்)
மக்கள் தொகை ; -----------?
ஒட்டு எண்ணிக்கை : ----------?
இந்த ஊரின் வாழ்வாதாரம் நிலமும், கால்நடையும் மட்டுமே என்ற நிலையிலிருந்து மாறி 15 வருடங்கள் ஆகிவிட்டிருகிறது . நகரம் நோக்கியும் , வெளிதேசம் சென்றும் வாழ் நிலைகளை பெருக்கிக்கொள்ளும் படிக்கு இந்த தலை முறை வந்துவிட்ட காரணத்தால் பணம் புழங்கும் கிராமமாக அந்த பகுதியில் இது விளங்குவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை . ஆனாலும் விவசாயத்தின் மீதான காதல் இன்னமும் சில ஈரம் கனிந்த மனங்களிடையே அங்கேயும் இருக்கத்தான் செய்கிறது .
காவிரியின் கிளையான வெட்டாற்றிலிருந்து "எண்கண் " மடையில் பிரியும் ஓடம்போக்கியின் பாசனமும் பின் தன்வழி தொடரும் வெட்டாறின் ஓரத்திலேயே அமையப்பெற்றதுமான ஊர் எங்களுடையது .. திருவாரூரிலிருந்து குடந்தை செல்லும் தேசிய சாலையில் 8 வது கிலோ மீட்டரில் வெட்டாற்றை தாவி கடக்கும் பாலத்திற்கு வலது புறம் செல்ல 2 வது கிலோ மீட்டரில் எட்டியலூர்
அதே போல் ஆரூரிலிருந்து மாயூரம் செல்லும் நெடுஞ்சாலையில் 5 கிலோ மீட்டரில் அதே வெட்டாற்றை மறித்து தாவும் பாலத்திற்கு இடமாக செல்ல இன்னொரு ஐந்தாவது கிலோமீட்டரில் . குடந்தை நெடுஞ்சாலைக்கும் மாயுரம் நெடுஞ்சாலைக்கும் பைபாஸ் செய்யும் வெட்டாற்றின் ஓரத்தில் அமைந்திருக்கும் கிராமங்களில் கொஞ்சம் நிறையவே செழிப்பான ஊர் இது.
ஆரூரிலிருந்து எங்கள் ஊருக்கு மேல் சொன்ன இரண்டு தடங்கள் வழியாகவும் சிற்றுந்துகள் இயக்கபடுகின்றன ..