செந்தமிழ்தாசன் என்கின்ற நான் இந்தியாவை சார்ந்த தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

தமிழ்பாற் கொண்ட அன்பினால் எனது தமிழ் நேசத்தை வெளிப்படுத்த இங்கே இருக்கின்றேன்.

வாழ்க தமிழ்!

யான் பிறந்தது தமிழ்நாட்டிலுள்ள சிறப்புமிகு மதுரை ஆகும். ஆங்கு ஒரு சிற்றுாரான கச்சைகட்டி என்ற ஊரிலில் 9.1.1982 ஆம் ஆண்டில் பிறந்தேன்.

ஆசிரியர் பணிக்கான தகுதிப் படிப்பினை முடித்துள்ளேன். தற்போது தமிழ் இலக்கியம் தொலைதுார கல்வி வாயிலாக பயின்று கொண்டிருக்கிறேன்.

அழியாத தமிழின் இனிதான காதலால் கட்டுண்டு செந்தமிழ்தாசன் என்ற புனைப்பெயர் இட்டுக்கொண்டேன்.

இங்கே எனது கருத்து, கட்டுரைகளை வெளியிட ஒரு தளம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தேன்.

இனி எனது எண்ணங்களை தமிழுக்கு காணிக்கையாக்க காத்திருக்கிறேன்.

-செந்தமிழ்தாசன்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:செந்தமிழ்தாசன்&oldid=579939" இலிருந்து மீள்விக்கப்பட்டது