திருவள்ளுவர் குல இரத்த வம்சாவளிகள்

திருவள்ளுவர் குல இரத்த வம்சாவளிகள்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அய்யன் திருவள்ளுவர் நாயனார் வள்ளுவகுலத்தில் பிறந்த தமிழன் வள்ளுவநாயகன் உலக தமிழ் கதாநாயகன் அனைத்து மதத்தவர்களும்,அனைத்து இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய உண்மைத்தமிழன் ஆவார். வள்ளுவர் குலத்தில் பிறந்தவர்கள் 1)மாமுனிவர் அகத்தியர் 2)மாமன்னர் நாஞ்சில் வள்ளுவர் 3)மாமன்னர் சாக்கிய வள்ளுவர் 4)கணியர் பூங்குன்றனார் அய்யன் திருவள்ளுவர் முதற்கொண்டு இவர்களெல்லாம் வள்ளுவர் குலத்தில் பிறந்தவர்கள் ஆவர். இன்னும் பல புலவர்கள்,பல மன்னர்கள், பல சித்தர்கள் வள்ளுவர் குலத்தில் பிறந்திருக்கின்றார்கள்.ஆனால் அவர்களைப்பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. திருவள்ளுவர் நாயனாரைப்பற்றிய ஆராய்ச்சி இன்னும் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் அவரது வாழ்க்கை வரலாறு கொண்டு வரப்படும். ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறளை எழுதிய முப்பாட்டன் பெயர் தெரியாமல் போனது.வள்ளுவர் குலத்தில் பிறந்ததால் தான் மதிப்பிற்காக திரு என்றும் வள்ளுவர் குலத்தில் பிறந்ததால் வள்ளுவர் என்றும் பெயர் வந்தது.


அய்யன் திருவள்ளுவர் வள்ளுவநாயகி 


வாசுகி அம்மையாரை காதல் திருமணம் கொண்டு அவரது வாழ்க்கையை சிறப்பாக நடத்திக்கொண்டு இருந்திருக்கின்றார்.


அவர் அனைத்து மக்களிடத்திலுமே அன்பு,அறவணைப்பு,பாசம்,பிணைப்பு,நேசம் அத்துணையையும் அற்பணித்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்திருக்கின்றார். பல இன்னல்களுக்கிடையே அவரது படைப்பான திருக்குறள் வெளிவந்தது. 


அனைவரையும் வியப்பூட்டும்,ஆச்சர்யப்படும்,திகைத்துப்போகும் அளவிற்கு செய்தது.


வள்ளுவர் குலத்தில் பிறந்தவரா இப்படியொரு நூலை எழுதியிருக்கின்றார் என திகைத்துப்போயிருந்திருக்கின்றார்கள். சும்மாவா வள்ளுவர் என்றால் காலத்தை கணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லவா! அது மட்டுமா சித்த வைத்தியம், 


மாந்திரீகம்,

நீரோட்டத்தையும்,

நிலவோட்டத்தையும் நொடிப்பொழுதில் கணிக்க கூடியவர்களாவும்,

சோதிடஞானிகளாகவும்,நல் வாக்கு சொல்லக்கூடியவர்களாகவும்,வான சாஸ்த்திரத்தில் வல்லுனர்களாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.


இன்னும் பலபல, தமிழகத்திலே கோவில்கள் பல உண்டு.கோவில்களில் இறைவனுக்கு பூசை வழிபாடு செய்வது, 


தமிழில் மந்திரம் ஓதுவது,கோவில்களை பராமரித்தும் இருந்திருக்கின்றார்கள்.


வள்ளுவகுலத்தில் பிறந்தவர்கள் 

தெய்வ வழிபாட்டையும்,

ஆன்மீகத்தையும் முறைப்படி கடைபிடித்து வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். 


மக்களுக்கு ஆன்மீகத்தையும்,

தெய்வ வழிபாட்டையும் முறைப்படி கற்றுக்கொடுத்து இருந்திருக்கின்றார்கள்.


வள்ளுவர்கள், அரசர்களுக்கு நெருங்கிய சோதிடர்களாகவும்,மக்களுக்கு காணிக்கை இல்லாமல் சோதிடம் பார்ப்பவர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள். ஏனென்றால் அரசு வள்ளுவர்களுக்கு தனி நிலம்,வீடு,மாத வருமானம் இவை அனைத்தையும் தந்திருக்கின்றது. காலப்போக்கில் வள்ளுவர் குலம் அழியத்தொடங்கியது.ஆரியர்களில் படையெடுப்பு தமிழகத்தில் வந்தது வள்ளுவர்களின் நன்நிலைமை தீயநிலைமைக்கு மாறத்தொடங்கியது. சூழ்ச்சியின் காரணமாக வள்ளுவமக்கள் அழிக்கப்பட்டனர்.வள்ளுவமக்கள் தொகை குறைந்து கொண்டே வந்தது. அனைத்து உரிமைகளையும் இழந்து தனித்தனியாக தமிழகத்திலே ஆங்காங்கே வாழ்ந்து வருகின்றார்கள்.உலகம் முழுவதும் வள்ளுவமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தமிழகம்,கேரளம்,

கர்நாடகம்,ஆந்திரம் இன்னும் பல மாநிலங்களில், பல ஊர்களில் 


சோதிடம்,நாடி சோதிடம்,

சித்தவைத்தியம்,

தொழில் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.


இன்னும் வள்ளுவமக்களைப்பற்றிய செய்திகள் பல பல

"https://ta.wikipedia.org/wiki/பயனர்:திருவள்ளுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது