துரை.செல்வக்குமார் என்பவர் 1971 ம் ஆண்டு ஜுலை 10 நாள் மேட்டுப்பாளையம் என்ற ஊரில் திரு.துரைராஜ் திருமதி.மேரிபுஸ்பம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார்.கட்டிடபொறியியலில் பட்டயமும்,சமூக அறிவியலில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளார்.சாதரணமான எழைக்குடுப்பத்தில் பிறந்த இவர் தொடர்முயற்சியால் ‘ மேட்டுப்பாளையம் தொகுதி செய்திகள்’ என்ற வட்டார மாத இதழை சகோதர,சகோதரிகள் உதவியுடன் நடத்தி வந்தார்.பல்வேறு காரணங்களால்  

இதழை தொடர்ந்து நடத்த இயலாமல் நிறுத்தப்பட்டது.மேலும் கிறித்துவ மதத்தின் மீது பற்றுக்கொண்ட இவர் தென் இந்திய திருச்சபை கோவை திருமண்டலத்தின் உள்ளூர் திருச்சபை,வட்டார திருச்சபை போன்றவற்றில் பொறுப்புகள் வகித்துள்ளார்,தற்போது தென் இந்திய திருச்சபை கோவை திருமண்டலத்தின் பொருளாளர் ஆக உள்ளார். இவருடைய மனைவி திருமதி.ரேச்சல் சுகிர்தா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார், இவர்களுக்கு மகிமா என்ற மகள் உள்ளார்.