அனைவருக்கும் வணக்கம்... தொகு

  உங்களுடன் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம்... என்னுடைய பெயர் வெ. ப. வெங்கடேஷ்... 
  ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு கோபம்... என்ன கொவம்ன்னா, என்னோட ஊரு பேரு எனக்கு மறந்துபோச்சே..
  நான் யாருன்னு கேட்டா எனக்கு தெளிவா சொல்ல முடியலியே.. நான் தான் இப்படி இருக்கேன்னு பார்த்தா என்னோட நண்பர்களும் இப்படித்தான் இருக்காங்க. 
நான் வட இந்தியால வேலை பார்க்கிறேன்.இங்க ஏறத்தாழ எல்லா மாநிலமும் சுத்திட்டேன். இங்க இருக்கிற மக்களோட அவங்க மொழி மேல உள்ள பாசம்,
அவங்க ஊர பத்தி அவங்களுக்கு இருக்கிற தெளிவு நம்ம கிட்ட இல்லியேன்னு ஆதங்கம் எல்லாம் சேர்த்து வைச்சு எங்கடா போய் கொட்டலம்ன்னு
தவிச்சுகிட்டே இருந்தப்ப தான் இந்த வலைப்பக்கத்த பார்த்தேன்.
  அதுவும் என்ன தேடினேன், எப்படி இந்த பக்கத்துக்கு வந்து சேர்ந்தேன்னு பார்த்தா அது கூட கொஞ்சம் எனக்கு ஆச்சரியம் தான். நான் தேடினது பாரம்பரியம்
என்ற வார்த்தைக்கு அர்த்தம். கடைசியிலே ராத்திரி கரெக்டா பன்னிரண்டு மணி பத்து நிமிஷத்துல எழுதி கிட்டு இருக்கேன். என்னோட
கோபங்கள், தவிப்புகள், அதிர்சிகள், எல்லாத்துக்கும் மேல என்னோட சந்தோஷங்களை இங்க உங்க எல்லார்கூடயும் பகிர்ந்துக்குறதுல எனக்கு ரொம்ப
சந்தோஷம்.
  என்ன பண்ணுறது எல்லாம் உங்க விதி. நான் எல்லாம் எழுதி நீங்க படிக்க வேண்டிய சந்தர்ப்பம். தப்புகள் நிறைய இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் 
பண்ணிக்கோங்க.. ஆனா சுட்டிக் காட்ட மட்டும் மறந்துடாதிங்க....


என்றும் அன்புடன்....

தேசாந்தரி...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:தேசாந்திரி&oldid=1389778" இலிருந்து மீள்விக்கப்பட்டது