1. ''அது என்ன மொழி? உலகெங்கும் உள்ள அறிஞர்கள் முட்டி மோதியும் அந்தப் புதிர் இன்று வரை கண்ணாமூச்சி ஆடி வருகிறது .அது சிந்து சமவெளி மக்கள் பயன்படுத்திய மொழி எது என்பதே! அந்த மொழியைப் பற்றி இது வரை நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் உலக ரீதியில் நட ந்து ,அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன .பலன் பூச்சியமே! அ ந்த மொழியின் மர்மம் இன்றளவும் தொடர்கிறது! கி.மு.2500 ல் சிந்து சமவெளி மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட மொழி அது என்பது மட்டும் நிச்சயம் . மும்பையில் பணிபுரிந்த பாதர் ஹிராஸ் 1953 ல் வெளியிட்ட ஓர் ஆராய்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது. சிந்து நாகரிக மொழி பண்டைய தமிழ் என்பதை அவரால் திட்டவட்டமாக நிரூபிக்க முடியவில்லை .பிறகு ரஷ்ய , பின்லாந்து மொழி அறிஞர்கள் சிந்து சமவெளி மொழி தமிழ் மொழியின் ஆரம்பக் கட்டம் தான் என்றனர். தமிழ் நாட்டை சேர்ந்த மொழி வல்லுநர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் மொஹென்ஜதாரோ மொழியைப் பற்றிய ஒரு முக்கிய கண்டுபிடுப்பு - வலமிருந்து இடமாக எழுதப்பட்ட மொழி அது என்பது. மேலும் அந்த மொழியில் அமைந்துள்ள வார்த்தைகளில் பதங்கள் உண்டு என்பதையும் அவர் கண்டுபிடித்தார் . மொத்தத்தில் , சுமேரிய, எகிப்திய மொழிகள் பாதிப்பு எதுவும் இல்லாத , இ ந்திய மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பிரத்தியேகமான மொழியை சிந்து சமவெளி மக்கள் உபயோகித்தனர் என்பது மட்டும் எல்லோராலும் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது .

                                                                                                       2. திருக்குறள் முத்து

திருக்குறளே ‘அ’ வில் தொடங்கி ‘ன்’ ல் முடிகிறது.அதாவது முதல் குறள் ‘அ’ வில் தொடங்கி 1330 ஆவது குறள் ‘ன்’ ல் முடிகிறது. ’அ’ வில் தொடங்கி ‘ன்’ ல் முடியும் குறட்பாக்கள்- 10. அவற்றின் எண்கள் 30, 46, 92 , 96, 147, 163, 175, 210, 483, 176. ஒரே சொல் ஆறு முறை வரும் குறட்பா எண்-350 ஒரே சொல் ஐந்து முறை வரும் குறட்பாக்கள் – 5.அவை 12, 200, 411, 645, 841. ஒரே சொல் நான்கு முறை வரும் குறட்பாக்கள்-22. அவை 204, 236, 241, 320, 359, 362, 365, 623, 641, 672, 722, 751, 756, 786, 881, 965, 973, 982, 1067, 1069, 1286. உதடு ஒட்டாக் குறட்பாக்கள்-24.அவை 208,240,286, 310,341, 419, 427, 472, 489, 516, 523, 678, 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1219, 1236, 1286, 1296. கால் இல்லாக் குறள் எண்கள்-213, 274, 391, 467, 495, 505, 700, 771, 786, 979, 1177, 1277, 1309. கொம்பில்லாக் குறள் எண்கள்-100, 224, 352, 385, 452, 485, 625, 969, 999, 1011, 1051, 1192, 1281, 1306, 1326. ஐம்பூதங்களில் தொடங்கும் குறள் எண்கள்-576, 20, 1309, 129, 947, 1049, 245, 11, 13, 16, 272, 542. வினாவும் விடையும் அமைந்த குறள் எண்-291. வினா மட்டும் அமைந்த குறள் எண் – 52. பொருளில் தொடங்கி பொருளில் முடியும் குறள் எண்- 751. ’க’ வில் தொடங்கி ’க’ வில் முடியும் குறள் எண்- 391. ’கு’ வில் தொடங்கி ’கு’ வில் முடியும் குறள் எண்- 604. திருக்குறளில் ஒரே இடத்தில் மட்டும் வரும் எழுத்துகள்-ங,ளீ. மிக அதிகமாக 1705 இடங்களில் வரும் எழுத்து-ன்

                                                                                                                            3.   டுடூஸ்
    டுடூஸ் பறவைகள் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகளால் முதல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன.அதன் பின்னரே டுடூஸ் பறவையை உலக நாடுகள் தெரிந்துகொண்டன.இந்தியவின் கடற்கரைப் பிரதேசங்களிலேயே டுடூஸ் பறவைகள் வாழ்கின்றன.இந்தியாவில் வாழ்கின்ற புறா இனப் பறவைகளைப் போன்றதே இந்தப் பறவை.இது வான்கோழியை விட பெரிய தலையும் வளைந்த அலகும் கொண்டது.கால்கள் குட்டையானவை.இறக்கைகள் சிறியவை.இப்பறவையால் பறக்கவும் முடியாது,வேகமாக ஓடவும் முடியாது.இந்திய சமுத்திரத்தில் உள்ள மோரீசு,ரேயூனியன் ஆகிய தீவுகளில் வாழ்கின்றன.இப்பறவையினம் அழி ந்துவிட்டது என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் இன்னும் சில பறவைகள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
      டுடூஸ் பறவையின் எதிரிகள் பன்றியும், குரங்கும் தான்.பன்றிகள் டுடூஸ் பறவையைத் துரத்திப்பிடித்து உன்னுகின்றன.குரங்குகள் டுடூஸ் பறவையின் முட்டைகளை உடைத்துக் குடித்துவிடுகின்றன.இவை,புல்வெளிகள் நிறைந்த நிலப்பகுதிகளில் கூடுகளைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றன.

இதனுடைய பழக்கவழக்கங்களைத் தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் இதன் இனம் குறுகிவிட்டது.இருப்பினும் உலக பறவையினங்களைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது, டுடூஸ் பறவையை மறப்பதற்கில்லை.


                                                                                                           4. கப்பல்களை விழுங்கும் கடல்
            பெர்முதா முக்கோண எல்லைக்குள் கப்பல்கல் மூழ்குவது பெரும்பாலும் மேற்கு அட்லாண்டிக் கடலில்தான்.அதுவும் ‘சர்காசோ’ என்று அழைக்கப்படும் கடல் பகுதியில்தான்.’சர்காசம்’ என்னும் கடல் தாவரப் பாசியின் பெயரால் இந்தக் கடல் பகுதிக்கு ’சர்காசோ கடல்’ என்னும் பெயர் ஏற்பட்டது.இந்தக் கடல் ‘அசைவற்ற கடல்’ என்றும் அழைக்கப்படுகிறது.தொடக்க காலங்களில் சர்காசோ கடலில் கப்பல்கள் மாயமாய் மறைந்த காரணம் வானிலை  தட்ப வெப்ப நிலை சரியின்மையும் கடற்கொள்ளையுமே என்று கூறப்படுகிறது.இருந்தபோதிலும்  ஷ்பேனிஷ் நாட்டுக் கப்பல் மாலுமிகளின் குறிப்புகள் ஓரளவு சரியாக உள்ளன.

பெர்முதா முக்கோண எல்லைக்குள் மூழ்கி மாயமாய் மறைந்த சில கப்பல்கள் ஆகஸ்டு 1800 - U.S.S Insurgent 340 பேர்களுடன். மே 1968 - Scorpion என்னும் நீர்மூழ்கிக் கப்பல் 99 பேர் அடங்கிய குழுவுடன். ஆகஸ்டு 20,1800 - நியூகேசிலில் இருந்து 90 பேர்களுடன் புறப்பட்ட USS பிக்கரிங் என்னும் கப்பல். அக்டோபர் 9,1814 - USS வாஷ்ப் என்னும் கப்பல் 140 பேருடன். அக்டோபர் 28,1824- USS வைல்டு கேட் என்னும் கப்பல் 14 பேர் அடங்கிய குழுவுடன். ஜனவரி 1880 -HMS Atlanta என்னும் கப்பல் 290 கப்பல் படைவீரர்களுடன். மார்ச் 4, 1918 -USS Cyclops என்னும் கப்பல் 309 கடற்படை வீரர்களுடன். 3-4 அக்டோபர்1951 -Sao Paulo என்னும் கப்பல் 8 பேர்களுடன்.



                                                                                             5.மூவகை மாணாக்கர்
         மூன்று வகையான கவனிப்பவர்களைப் பற்றி  நன்னூல் கூறுகின்றது.
                        அன்னம்ஆவே மண்ணொடு கிளியே
                        இல்லிக் குடம் ஆடு எருமை நெய்யரி
                      அன்னர் தலை,இடை,கடை மாணாக்கர்

- நன்னூல்-38

     முதல் மாணாக்கர்
                 அன்னமும், பசுவும் போன்றவர் முதல் மாணாக்கர். அன்னம் என்பதற்கு சோறு என்ற பொருளும் உண்டு.சோற்றில் பாலையும்  நீரயும் கலந்து வைத்தால் சிறிது நேரத்தில் பால் சோற்றோடு கலந்து உறிஞ்சப்பட்டுவிடும். நீர் மட்டும் தனியே பிரிந்து நிற்கும்.முதல் மாணாக்கரும் இப்படித்தான் இருப்பர்.                    பசு புல்லைக்கண்ட இடத்தே வயிறு நிரம்ப மேயும்.பின்பு ஓரிடத்தில் படுத்து அசைபோடும்.முதல் வகை மாணாக்கரும் ஆசிரியர் கூறும் கருத்துகளைத் தம் உள்ளத்தில் நிறைத்துக்கொண்டு வந்து சிந்திப்பர்.
    இடை மாணாக்கர்
              மண்னையும் கிளியையும் போன்றவர் இடை மாணாக்கர்.உழவர்களின் முயற்சி எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவுக்கே அது பயன் தரும்.இடை மாணாக்கரும் இப்படித்தான். கிளிக்கு எதைப் பழக்கித்தருகிறோமோ அது மட்டும் தான் தெரியும்.இடை மாணாக்கரும் ஆசிரியர் கற்பித்த அளவு மட்டுமே கற்பர்.மேற்படி சிந்திக்க அறியார்.
    கடை மாணாக்கர்
               ஓட்டைக்குடமும்,ஆடும் எருமையும்,வடிதட்டும் போன்றவர் கடை மாணாக்கர்.ஓட்டை விழுந்த குடத்தில் ஒரு பக்கம்  நீரை ஊற்ற மறுபக்கம் ஒழுகும்.இப்படித்தான் கடை மாணாக்கரும் ஆசிரியர் கூறுவதை ஒரு காதிலே வாங்கி மறு காதிலே விடுவர். ஆடு நுனிப்புல் மேய்வது போல இவர்களின் கவனம் இங்கும் அங்குமாக அலைந்து,வயிறு நிறம்பாத ஆட்டைப்போல எந்த அறிவையும் முழுமையாகப் பெறாமல் திண்டாடுவர்.வடி தட்டியைப்போல கடை மாணாக்கரும் ஆசிரியர் கற்றுத்தரும் நல்லனவற்றை மறந்துவிடுவர்.
             மாணவனாகிய நீ நன்மாணாக்கனாக வர வேண்டும்.முதல் மாணாக்கனாக வர வேண்டும். அதற்கு இடையறாது முயற்சிக்க வேண்டும்.உன் கவனம் கல்வியில் இருக்கட்டும் நல்லனவற்றைச் சிந்திக்கட்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:DEEBAGAVATHINKL&oldid=2280680" இலிருந்து மீள்விக்கப்பட்டது