ஜடாயு இந்துமதம், கலாசாரம், சமகால சமூக அரசியல் போக்குகள் ஆகியவை குறித்து தமிழ் இணையத்தில் தொடர்ந்து எழுதியும், விவாதித்தும் வருபவர். தற்போது பெங்களூரில் கணினித் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி வருகிறார். திண்ணை.காம், தமிழ்ஹிந்து.காம் மற்றும் பல இணைய தளங்களில் இதழ்களில் ஆழமும், பொருட்செறிவும் கொண்ட பல கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். வரலாறு, தமிழ் மரபிலக்கியம், நவீனத் தமிழிலக்கியம், சமயம், சம்ஸ்கிருதம், கலாசாரம், சமூகப் பணிகள் ஆகியவற்றில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். தமிழ்ஹிந்து இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்.

பண்பாட்டைப் பேசுதல்” என்ற கட்டுரைத் தொகுப்பில் (தமிழ்ஹிந்து வெளியீடு) இவரது கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. “சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்” என்ற சிறு நூலின் ஆக்கத்திலும் பங்களித்திருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jataayu&oldid=690412" இலிருந்து மீள்விக்கப்பட்டது