ஆஞ்சநேய கோவிலின் முகப்பு தோற்றம்

ஆலய அமைவிடம் தொகு

பொதுவாக அனைவராலும் மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் என அறியப்படும் கோவிலின் திருத்தமான பெயர் ”ஸ்ரீ சுந்தர ஆஞ்நேயதிருப்பதி ” தேவஸ்தானம் ஆகும்.சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். தெல்லிப்பழை துர்க்கையம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாருக்கு அருட்காட்சி கொடுத்து அருட்கவி சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின்கீழ் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இணுவில் மருதனார்மடத்தில், காங்கேசன் துறை பிரதான வீதியில், பொதுச்சந்தைக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.

கோவிலை அடைவதற்கான வரைபடம்

 
72 அடி உயர அனுமன் சிலை

பிரமாண்டமான ஹனுமான் சிலை தொகு

ஆஞ்சநேய கோவிலின் முகப்பில் இருக்கும் ஹனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது . இந்த சிலையானது 72 அடி உயரமானது. இது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது. இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. இச் சிலையானது மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரிய கூடிய வகையில் உள்ளது. இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக கோவிலுக்கு முன்பாக செல்லும் மின்சார கேபிள்களால் இச் சிலையின் ரம்மியம் குறைக்கப்படுகின்றது.


ஆலய வரலாறு தொகு

ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமம் ஜபித்து ராமசக்கரத்தை புஜித்து வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என அருள்வாக்கு கூறுகின்றது.இக்கோவில் 22.04.1999 இல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிடேகம் நடைபெற்றது. மருதர்பெரும்பதி ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய திருப்பதி அமைப்பதற்கு எண்ணிய போது பெருமைக்குரிய அருட்கவி சி.வினாசித்தம்பி அவர்களால் இப்பதிமீது பாடப்பெற்ற முதலாவது பாடல் பின்வருமாறு.

"சிந்தனைக் கரியோனாகிச்
சிவனுருத் தாங்கி இராம
மந்திரமூர்த்தியாகி வருமடி யாருக்கெல்லாம்
பந்தனை நீக்கி வேண்டும்
பலனெலாம் கொடுக்கும் செல்வச்
சுந்தரஆஞ்சனேய
சுவாமியே போற்றி போற்றி....."

ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் , அழகனாய் கோலம் கொண்டு காண்பவர் கண்ணுக்கெல்லாம் கண்கொள்ளா காட்சியாக அமைந்து காணப்படுகின்றது. இத் திருவுருவத்தில் தியானத்தின் மேன்மைக்காக கண்மலா் மூடிக்காணப்படுகின்றது. அத்துடன் அருட்பெரும் கரத்தைக் கூப்பி இதயமேல் அணைவுசெய்து கோலமாம் கோலங்கொண்டு காட்சியளிக்கின்றது. அத்துடன் வடிவுடை மன்னனாகி சிரசின்கண் அழகு முடியும் , மார்பினில் வண்ணக்கோல நறுமண மாலைகளும் அணிந்து காணப்படுகின்றது. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் பக்த அடியவனான திரு வ. சிவநேசன் அவர்களின் கலியுகம் காக்கும் செல்வன் எனும் தலைப்பில் அமைந்த பாடல் மூலம் இவ் ஆஞ்சநேயரின் மகிமையை அறிந்து கொள்ளலாம். ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு இணுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டு அங்கிருந்து பக்தருக்கு அருள்பாலிக்கின்றார்.இக் கோவிலில் காலை மத்திய மற்றும் அந்தி நேர பூஜைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் இடம்பெறும்.

 
கோவில் மண்டபம்

ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிஷேகத்தின் பின்னர் மிக அழகான 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிடேகம் 09.02.2005 இல் நடைபெற்றது. இவ் இராஜ கோபுர அழகை விபரித்து கும்பாபிடேக நாளில் ”எம்குலம் நிமிர்ந்து வாழ . . . ” எனும் துதிப்பாடல் உதயன் பத்திரிகையில் இடம்பெற்றது.

துதிப்பாடல் தொகு

"உருத்திர மூர்த்தம் கொvண்ட சுந்தர ஆஞ்சநேயன்
தூலமாம் லிங்கமாகிக் கோயிலின் வாசல் முன்னே
மாமலை போன்ற வண்ணக் கோபுரம் மேலே நின்று 
ஆசியை வழங்கும் காட்சி காண்பவர் மேலோர் தாமே 
இயற்கையின் வனப்புக் கொண்ட  தெய்வீகச் சூழல் தன்னில் 
குடியென்ன அமர்ந்த எங்கள் சுந்தர ஆஞ்சநேயன் 
தனெக்கெனக் கோயிலகிக் அற்புதக் கோலத்தோடு 
கோபுரம் மேலே நின்றான் குடிமுழு தாள என்றே 
கோபுரம் லிங்கமாக மருங்கினில் நாதம் சேர 
காண்பவர் மனதில் இராமன் தோற்றமாய் வந்து நிற்க 
கோபுர நடுவில் அனுமன் நின்றிடும் கோலம் காண்போம் 
குடமுழுக்கு காடி ஐயா குடி முழு தாண்டு எங்கள் 
குலமது நிமிர்ந்து வாழ நாட்டினில் அமைதி சேர 
இயற்கையின் அனர்த்தமின்றிக் நோய்பிணி இன்றி வாழ 
ஆசியை வழங்கி எம்மை ஆண்டிடும் ஐயா போற்றி  "


உசாத்துணை தொகு

  • அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் துதிப் பாடல்கள் நூல்

(வெளியீட்டு திகதி :- 01.10.2005)

  • 09.02.2005 திகதிக்குரிய உதயன் பத்திரிகை
  • ஆற்றல் பல நல்கும் ஆஞ்சநேயர் நூல்

(சர்வானந்தமய பீடத்தால் 08.01.2001 அன்று வெளியிடப்பட்டது)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Jgopi91&oldid=2174656" இலிருந்து மீள்விக்கப்பட்டது