தமிழ்
             ராஜராஜ சோழன்

முன்னுரை : தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன் கடல் தாண்டி ஒரு நாட்டையே கைப்பற்றிய முதல் மன்னராவார். உலகில் முதல் யானைப்படை⸴ தனக்கென்று ஓர் இராணுவ படை⸴ உலகில் 8வது அதிசயமான தஞ்சைப் பெரிய கோவில் எனப் பல புகழுக்குச் சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன் ஆவார்.

சோழர் மரபினரின் “பொற்காலம்ˮ எனப் போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த மன்னராவார்.

அறிவுத் தெளிவும்⸴ அரசாங்க விவேகமும்⸴ நிர்வாகத் திறமையும்⸴ போர் வீரமும் கொண்ட மாமன்னராவார். இம் மன்னனின் ஆட்சிக் காலமாகிய கிபி 985 முதல் கிபி 1014 வரை பல சாதனைகளைத் தன்னகத்தே கொண்டு சிறப்பு பெறுகின்றார்.

தொடக்க வாழ்க்கை : கிபி 957 முதல் கிபி 973 வரை சோழநாட்டை ஆண்ட சுந்தர சோழனுக்கும்⸴ சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் கிபி 585 ஐப்பசித் திங்கள் 25ஆம் நாள் சதய நன்னாளில் பிறந்தவராவார்.

இவர் இயற்பெயர் “அருண்மொழிவர்மன்” ஆகும். இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே இவர் தன் தன்னுடைய தொடக்க ஆட்சிக்காலத்தில் அழைக்கப்பட்டார்.

ஆனால் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதலே ராஜராஜ சோழன் என அழைக்கப்பட்டார். கிபி988 ஆம் ஆண்டு தந்தை இறந்தார். எனினும் உடன் இவர் ஆட்சி பீடம் வரவில்லை. 15 ஆண்டுகாலம் உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னர் தான் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


சோழ நாடு : ராஜராஜசோழன் அரசனாகப் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசானது வடக்கில் தொண்டை நாடு⸴ தெற்கில் பாண்டிய நாடு⸴ வட எல்லை வரையுமே பரவியிருந்தது. வடக்கு கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது. தெற்கே பாண்டிய நாடு இருந்தது.

அரசியர்கள் : ராஐராஐ சோழன் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார். ஆனால் இவருடைய பட்டத்து அரசி “உலகமகாதேவி” ஆவார். கல்வெட்டில் இவரது மனைவிமார்களாகப் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்துள்ளார். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது

அரசியல் : இவரது வரலாறு படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது. ஒருவர் அரச குடும்பத்தில் பிறந்தாலும் அவரை சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் பிற போட்டிகளை பற்றி தெரிந்து கொண்டேன். ராஜராஜ சோழன் நாகரீகத்தின் தொடக்கத்தைக் குறித்தான், அது அன்றைய காலத்தில் மிகச்சிறந்ததாக இருந்தது, இன்று நாம் இருக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது. சமீபத்திய புத்தகம் ராஜராஜ சோழனின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவத்தின் விவரங்களைக் குறிப்பிடுகிறது, அவர் நம்பமுடியாத இராஜதந்திர மற்றும் இராணுவ புத்திசாலித்தனத்தையும் கொண்டிருந்தார். ராஜராஜனின் புகழ் : 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் ராஜராஜனின் நிலங்கள் மற்றும் அவரது எதிரிகள் மீது ராஜராஜன் கொண்டிருந்த நேரடி ஆதிக்கம் பலவற்றைப் பேசுகிறது. நவீன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் எழுச்சியைக் கண்ட குறிப்பிட்ட காலப்பகுதி இதுவாகும். சமூக, அரசியல், பொருளாதார மற்றும் நவீன வளர்ச்சியின் முழு நிலப்பரப்பும் இந்த வம்சத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விவசாயம், நகரங்கள், ஆளும் குழுக்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக வலையமைப்பில் குறிப்பிடத்தக்க எழுச்சி ஆகியவற்றைக் கொண்டுவந்தது.

முடிவுரை : இந்த ராஜராஜ சோழன் புத்தக மதிப்பாய்வின் மூலம் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிலைநிறுத்துவதற்கு எடுத்த தைரியம் மற்றும் துணிச்சல் பற்றிய நல்ல யோசனையை பெற முடிகிறது . இது தவிர, இராணுவ எந்திரம் மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதையும் புத்தகம் தொடுகிறது. புத்தகம் நமது பெருமையை பேசுகிறது. தமிழர்கள் பண்டைய காலம் தொட்டே அறிவும் செல்வ வளம் மிக்கவர்கள் என்று தெரிய வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Nitin_Chinnathambi&oldid=3694443" இலிருந்து மீள்விக்கப்பட்டது