மறத்தமிழன்

தொகு

மறத்தமிழன்

இவ்வார்த்தையை நம்மில் பலரும் கூறி கொள்வதுண்டு, பலர் கூறியிருப்பதை நாம் கேட்டதும் உண்டு அதற்கான விளக்கம் தான் என்ன ?, மறம் என்ற அந்த ஒற்றை சொல்லுக்கு அப்படி என்னதான் தனித்துவம் இருக்கு; அதன் மகத்துவம் தான் என்ன ,ஏதோ நான் இது வரை பயின்றதை வைத்து ஓர் விளக்கம் .

மறம் என்ற ஒற்றை சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லுதல் என பத்தும் அடங்கியிருப்பது தான் இதன் சிறப்பு,இவைகளை பற்றி ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் என்ற நூலிலும் குறிப்பிடபட்டுள்ளது சரி அப்படி என்னதான் இந்த பத்திலும் இருக்கிறது பார்ப்போம்.


தீரம் : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்.'''தீரம்''' : எதையும் துணிவுடன் செயல்படுத்தும் திறன்


வீரம் : பராக்கிரமமான மனவலிமை, எச்சூழ்நிலையிலும் தளரா மனம், ஆயிரம் பேர் எதிர்கொண்டாலும் ஒற்றை ஆளாய் நின்று சமாளிக்கும்(எதிர்க்கும்) திறன்.


வலிமை : தனது நிலைபாட்டின் மீது உள்ள உறுதி, பலம் அதாவது நக்கீரன் தனது வாதத்தின் மீதுவைத்துள்ள நிலைபாட்டை போல


ஆற்றல் : எதையும் காலம் தாழ்த்தாமல் விரைவில் செய்து முடிக்க கூடிய திறன் கொண்டிருத்தல்,


சினம் : கோபம்


சீற்றம் : அநீதிகளை கண்டு பொங்கி எழுதல்,& ஒரு செயலின் மீதான தீவிரம்.


அமர் : உக்கிரமான போர்முறைகளில் கைதேர்ந்தவர்கள் எச்செயலிலும் பின்வாங்காதவர்கள்.


அழித்தல் : ஓர் செயலுக்கு தீர்க்கமான முடிவெடுத்தல் அச்செயல் மீண்டும் உருப்பெறாமல்அழித்தல்.


வெற்றி : செயல்களனைத்தையும் நீதிக்கு உடன்பட்டு களிப்புறுதல், தோல்விக்கு தினம் தினம் முற்று வைத்தல்.


கொல்லுதல் : நீதிக்கு தலைவணங்கல், மனுநீதி சோழனை போல நீதிக்கு பின் தான் மற்றவை(பந்தபாசம்)எல்லாம்


என்ன மறம் என்ற சொல்லிற்கான விளக்கம் அறிந்தீர்களா, நமக்கும் இதில் அனேக செயல்கள் இருக்கும் ...இருக்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Prakash_sona&oldid=1148268" இலிருந்து மீள்விக்கப்பட்டது