பயனர்:Rabiyathul/மணல்தொட்டி

ஒட்டுண்ணி நோய்கள் தொகு

ஒட்டுண்ணி நோய்கள் தொகு

தமிழ்நாட்டு ஓவியம் தொகு

https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE கோயிலில் நுழையும் போதே இரண்டு பக்கங்களிலும் நிற்கும் தூண்களில் நடன மாதர்களின் உருவங்கள் வியப்புறும் முறையில் வரையப் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டு ஓவியக்கலையும், நடனக் கலையும் ஆயிரம் ஆண்டுகட்கு முன் அடைந்திருந்த சிறப்பை எடுத்துக் காட்ட இவ்விரு ஓவியங்களும் போதும். இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது அப்பர் சுவாமிகளின் ' கைந்நின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே ' என்ற வாக்கு நினைவுக்கு வருகிறது. ஸ்ரீ வல்லபதேவன் காலத்தும் கல்வெட்டுள்ள இன்னொரு கோயில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடைய நல்லூருக்கு அருகில் உள்ள திருமலைபுரத்தில் இருக்கிறது. கோயிலின் உள்ளே விதானத்திலும், தெற்குச் சுவரிலும் காணப்பெறும் ஓவியங்கள் சிற்றண்ணல் வாயில் காலத்தவையெனக் கூறலாம். ஏறக்குறைய இதே காலத்தில் தான் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள திருநந்திக்கரைக் குகைக் கோயிலில் காணப்பெறும் ஓவியங்கள் எழுதப்பட்டன. இங்கே உள்ள சிவபெருமானது ஓவியத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் சிற்றண்ணல்வாயில் தூணில் காட்சி தரும் அரசனது உருவமும், அஜந்தாவில் உள்ள அவலோகித போதிசத்துவரது உருவமும் நினவுக்கு வராது போகா. பல்லவர் காலத்திலிருந்து படிப்படியாக வளர்ந்த தமிழ் நாட்டு ஓவியக்கலையின் ஒரு பகுதியைத் தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் கருப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ள சுற்றுக்கோயிற் சுவர்களில் தீட்டிய திரிபுரதகனம், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாற்றுக் காட்சிகள் இவற்றில் பார்க்கிறோம். இந்த ஓவியங்களின் வண்ணம் சில இடங்களில் எவ்வளவோ அழிந்து விட்டாலும் அவற்றின் வரியின் உயர்வும், வண்ணச் செறிவும் உணர்ச்சிப் பொலிவும் நம்மைக் கவர்கின்றன.

சோழர்கள் காலத்திலேயே கட்டப்பெற்ற திருப் பருத்திக்குன்றம் வர்த்தமானர் கோயிலில், அப்பொழுதே ஓவியங்கள் தீட்டப்பெற்றன எனவும், அவற்றைப் பார்த்தே . " மனநிறை பூதமாகும் பாவைகன் கூடசாலை-வினை வெல்லும் - வேதமூன்றும் புராணமு மெழுதி" (620) என மேருமந்தர புராண ஆசிரியரான வாமன முனிவர் கூறினார் எனவும் கொள்ளலாம். கோயிலின் இசைமண்டபத்தைக் கட்டிய இருசப்பராலேயே (1387-38) பலிபீடத்துக்கு மேலே விதானத்தில் காணப்பெறும் ஓவியங்களும் வரையப்பட்டன எனக் கருதலாம். பொதுவாக ஓவியங்கள் வனப்புடன் தீட்டப்பெற்றிருக்கின்றன. பலிபீடத்துக்கு மேலேயன்றி, விதானத்தில் மற்ற இடங்களில் காணப்பெறும் ஓவியங்கள் பதினாறும் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனக் கொள்ளலாம். இவை சமண தீர்த்தங்கரர்களின் கதைகளை விளக்குகின்றன. ஓவியங்களினடியில் பெரும்பாலும் அவை எவற்றைக் குறிக்கின்றன என்று எழுதப்பட்டிருக்கின்றன. நீண்ட மூக்குடனும், காதளவோடும் கண்களுடனும், பக்கவாட்டிலே வரையப்பட்ட இவ்வோவியங்கள் கூர்ச்சர ஏட்டுச் சித்திரங்களை நமக்கு நினைவுக்குக் கொண்டுவருகின்றன. இதே காலத்தவையாக வடஆர்க்காடு மாவட்டம் போளூரையடுத்த திருமலையில் உள்ள திகம்பர சமண மடத்து ஓவியங்களையும், புதுக்கோட்டைக்கு அருகே உள்ள நார்த்தாமலை விஜயாலய சோழேச்சுரம் என்னும் கோயிலின் சுவர்களிலும் விதானங்களிலும் காணும் ஓவியங்களையும் கூறலாம்.

பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சாவூரை ஆண்டுவந்த இரகுநாத நாயக்கர் காலத்து எழுதப்பட்ட ரகுநாதாப்யுதயம் என்னும் நால் ரகுநாத நாயக்கர் ஸ்ரீராம சதனம் என்னும் அரண்மனையைக் கட்டி, அதில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்தைச் சித்திரமாக வரையச் செய்தார். என்பதையும், விஜயபவனம் என்ற வேறோரரண்மனையில் சோழர்கள், பாண்டியர்கள், சிங்களவர், செஞ்சி நாயக்கர்கள் இவர்கள் மீது தாம் கொண்ட வெற்றிகளைச் சித்திரங்களாக எழுதுவித்தார் என்பதையும் குறிப்பிடுகிறது. கும்பகோணம் இராமசுவாமி கோயிலிலுள்ளவையும், தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சோழர் காலச் சித்திரங்கட்கு மேலே காணும் நாயன் மார்களின்' உருவங்கள், 'புராணக் காட்சிகள் ஆகிய இவையும் இக்காலத்தவையே. பெருவுடையார் கோயிலின் ஒவ்வொரு சித்திரத்தின் அடியிலும் தெலுங்கு எழுத்துக்களில் காட்சியின் தலைப்பு எழுதப்பெற்றிருக்கிறது: " இவை ஒன்றைப் பார்த்தாற்போல் மற்றொன்று இருப்பதோடு ஒரு குறுகிய வரம்பிற்குட்பட்டு விளங்க வகை இல்லாமல் இருப்பதையும் காண்கிறோம். அவைகளில் வேறுபாட்டுணர்ச்சி இல்லை ; மலர்ச்சி இல்லை ; பொருளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை இல்லை .

எந்திரப் பிணைப்பு தொகு

சுழலும் எந்திரங்களையும், மேலுங்கீழும் இயங்கும் எந்திரங்களையும் சமநிலைப்படுத்தல் (Balancing) அவசியம். எந்திரத்திலுள்ள எடைகளைத் தக்கபடி அமைத்து, அதில் தோன்றும் விசைகளும் சுழல் இரட்டைகளும் சரிவரச் சமநிலைப் படுமாறு அமைத்துத் தாங்கிகளின்மேல் மிகையான அழுத்தங்கள் தொழிற்படாதவாறும், தண்டு பக்கவாட்டில் அசையாதவாறும் செய்யவேண்டும். வேகமாக இயங்கும் எஞ்சின்கள் இவ்வாறு சமநிலைப் படுத்தப்படுகின்றன. ரெயில் எஞ்சினின் ஓட்டும் சக்கரங்களின்மேல் பிறைவடிவான எடைகளைப் பொருத்தி, அவற்றை இவ்வாறு சமநிலைப்படுத்துகிறார்கள்.இயங்கும் எந்திரங்களில் பலவகையான அதிர்வுகள் தோன்றுகின்றன. முறுக்கு, குறுக்கு, நெடுக்கு, சுழல் அதிர்வுகள் தோன்றக்கூடும். இவற்றைக் கணித முறைப்படி, ஆராய வேண்டும்.நழுவு கிராங்க்கு (Slider crank) அமைப்பு நேரான இயக்கத்தைச் சுழல் இயக்கமாக மாற்றுகிறது. P, Q என்ற தாங்கிகள் முறையே தங்கள் சந்திற்குள் அசையும்பொழுது, PQ என்ற பிணைப்பிலுள்ள S என்ற புள்ளி ஒரு நீள்வட்டத்தை வரைகிறது. QS, PS என்பவை முறையே நீள்வட்டத்தின், அரைப் பெரிய அச்சு அரைச் சிறிய அச்சு ஆகும்.மெதுவாக முன்னேறி விரைவாகத் திரும்பிவரும் இயக்கத்தைத் தரக்கிராங்க்கு-சந்துள்ள நெம்புகோல் (Crank and Slotted Lever) விரைவு திரும்பு இயக்கம் என்ற சாதனம் பயன்படுகிறது.நீள்வட்டங்களை வரையவும், நீள்வட்ட வடிவான பரப்புக்களைப் பெறவும் நீள்வட்டவரையி (Trammel) என்ற கருவி பயன்படுகிறது. இதில் தவாளிப்புக்கள் கொண்ட இரு சட்டங்கள் நேர்க்குத்தாகப் பொருத்தப் பட்டிருக்கும் ஒரு தடியில் பொருத்தப்பட்ட இரு முனைகள் தவாளிப்புக்களில் நழுவுமாறு அமைந்திருக்கும். சட்டத்தின் முளையில் ஒரு பென்சிலைப் பொருத்தி, அதை நகர்த்தி நீள்வட்டத்தை வரையலாம். நான்கு சட்டப்பிணைப்பு என்பது பெரும்பான்மையான எந்திரங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கும். இதில் நான்கு இணையான முளைகள் நான்கு சட்டங்களால் பிணைக்கப்பட்டிருக்கும். இந்நான்கு பிணைப்புக்களும் இணையான பல தளங்களில் இயங்குமாறு அமைந்திருக்கும். இதைச் சீர்திருத்தி அமைத்து, ஆக்கர் மானின் ஓட்டும் பல்லிணை (Ackermann Steering g.) என்ற அமைப்புப் பெறப்பட்டது. இது மோட்டார் வண்டிகளில் பயன்படுகிறது. வண்டி ஒரு முனையில் திரும்பும் போது தன் முன்சக்கரங்கள் இணையாக இல்லாவிட்டால் அது பக்கவாட்டில் நழுவும். சக்கரங்களை இணையாக இருத்த இந்த இணைப்புப் பயன்படுகிறது.எந்திரத்தின் காட்டியில் (Indicator) பொருத்தப்பட்ட பென்சிலின் இயக்கத்தைப் பெரிதாக்கக் கிராஸ்பி காட்டி (Crosby indicator) என்ற சாதனம் பயன்படுகிறது. கார்லிஸ் வால்வு பல்லிணை (Corliss valve gr) என்ற அமைப்பையும் இங்குக் குறிப்பிடவேண்டும். இதில், எஞ்சினின் தண்டு சுழன்று, ஒரு கிராங்க்கைச் சுழற்றி ஒரு வட்டத் தகட்டை முன்னும் பின்னும் அசைக்கிறது. இந்த இயக்கத்தினால் அது நீராவி வால்வுகளை விரைவாகத் திறந்தும் மூடியும் எஞ்சினின் திறமையை அதிகமாக்குகிறது.

ஒடியா மொழி தொகு

17ஆம் நாற்றாண்டின் நடுப்பகுதி முதல் கவிஞர்கள் அலங்காரமான நடையில் எழுதத் தொடங்கினார்கள். காதல் வெறியே கவிதையின் பிரதானமான பொருளாயிற்று. அத்தகைய கவிதைகள் யாத்தவர்களுள் தலையாயவர் தீனகிருஷ்ணர், உபேந்திர பஞ்சு, அபிமன்யு, பக்த சரணர் ஆகியோர்.

தீன கிருஷ்ணருடைய ரசகல்லோல் என்னும் காவியம் இனிய அமுதம் போன்றது. அழகிலும் இசையிலும் அதற்கு இணையான காவியம் கிடையாது. உபேந்திர பஞ்சு வியக்கத்தக்க மேதையாகவும் சகலகலா பண்டிதராகவுமிருந்தார். அவர் சொற்களையும் எழுத்துக்களையும் கொண்டு செய்யும் ஜால வித்தைகள் அற்புதமானவை. அவருடைய கவிதையில் அலங்காரங்கள் அனைத்தும் காணப்படும். யமகம், அனுப்பிராசம், கோமூத்திரிகை, பந்தங்கள் முதலிய சகலவித யாப்புக்களையும் கையாள்கிறார். ஒரே மெய்யெழுத்து வர்க்கத்தைக் கொண்டே காவியம் முழுவதையும் எழுதுவார். அவருடைய பிரேமசுதாநிதி என்னும் காவியத்தில் இருபது செய்யுட்கள் உள. இறுதிப் பத்துச் செய்யுட்களை அடியிலிருந்து படித்துக்கொண்டு போனால் முதல் பத்துச் செய்யுட்களாகவே இருப்பதைக் காணலாம். அவருடைய கோடி பிரமாண்ட சுந்தரி என்னும் காவியம் மழை காலத்தை வருணிக்கிறது. ஆயினும் ஒவ்வொரு வரியிலும் முதல் எழுத்தை விட்டுவிட்டுப் படித்தால் அந்தக் காவியம் கூதிர் கால வருணனையாக ஆகிவிடும். முதல் இரண்டு எழுத்துக்களையும் விட்டுவிட்டால் வேனிற்கால வருணனையாம். அவருடைய கலாகௌதுகம் என்னும் கவிதையிலுள்ள செய்யுட்கள் ஒவ்வொன்றின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் ககரமாகும். காதற்கதைக் காவியங்கள் அனைத்திலும் தலைசிறந்தது அவருடைய லாவண்யவதி என்பதேயாம்,

அவருக்குப் பின்வந்த சிறந்த கவிஞர்கள் சதாநந்தர், பிரஜாநாதர், அபிமன்யு, யதுமணி ஆவர். சதானந்தர் ரூபகோஸ்வாமியின் நூல்களை எல்லாம் மொழிபெயர்த்தார். அவருடைய கவிதைகள் எளிய நடை வாய்ந்தவை. ஆனால் அவருக்கும் உபேந்திரருடைய ஜாலவித்தைகள் தெரியும்.

அபிமன்யு அதிகப் பாண்டியத்தியமுடைய கவிஞர். அவருடைய காவியங்களில் சிறந்தது விதக்த சிந்தாமணி என்பதாகும். அதன் இசை வளத்தில் ஈடுபடாத ஓரியர் எவரும் இலர். அபிமன்யு அமுதத்தைப் பெய்யும் தெய்வக் குயிலாகக் கருதப்படுகிறார்.

பிரஜாநாதர் பன்மொழிப்புலவர். அவருடைய சமரதரங்கம் என்னும் போர்ப் பாடலும், சதுரவினோதம் என்னும் காதற்கதைகளும், அம்பிகாவிலாசம் என்னும் காவியமும் ஓரியா இலக்கியத்தில் மிகுந்த சிறப்புப் பெற்றவை.

பக்த சரணருடைய மதுரமங்களம். கலாகளேபர சௌதிஷம், மனபோத சௌதிஷம் ஆகியவற்றை ஒரியா நாட்டில் தெரியாதவர் இலர்.

இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஒரியா நாட்டினர் இதிகாசங்களாகக் கருதாமல் புராணங்களாகவே கருதுகின்றளர். பலர் அவற்றை மொழி பெயர்த்துளர். ஆயினும் 14ஆம் நூற்றாண்டிலிருந்த சரளதாசருடைய மகாபாரதமும், 15-ஆம் நூற்றாண்டிலிருந்த பலராமதாசருடைய இராமாயணமும் கீதையுமே மிகச் சிறந்தவை. இவர்கள் அனைவரும் மூல நூல்களில் காணப்படாத பல சுவையான கதைகளைத் தாமாகப் படைத்துள்ளனர்.

17ஆம் நூற்றாண்டில் மகாதேவதாசர் இயற்றிய விஷ்ணுகேசரி புராணமும், 18ஆம் நற்றாண்டில் பீதாம்பரதாசர் இயற்றிய நரசிம்ம புராணமும், அதே நூற்றாண்டில் கௌரங்கதாசர் இயற்றிய தாமோதர புராணமும் சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை அல்ல. அவர்கள் தாமாகவே எழுதியவை.

சமய நூல்கள் : இராம பக்தியின் காரணமாக இராமாயணம், அத்யாத்ம ராமாயணம், இராமவிலாசம் போன்ற நூல்கள் எழுந்தன. கிருஷ்ண பக்தி காரணமாகவும் பல பெரியோர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்.

அனுபூதி நூல்களும் அளவின்றிக் காணப்படுகின்றன். இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட நூல்களும் உள.

எட்வர்டு தொகு

எட்வர்டு IV (1442-1483) : File:King Edward IV.jpg இங்கிலாந்து மன்னர் III-ம் எட்வர்டு இறந்ததும், அரசுரிமைபற்றியார்க் வமிசத்தினர்க்கும் லங்காஸ்ட்டர் வமிசத்தினர்க்கும் இடையே யுத்தம் நடந்தது. இதற்கு ரோஜா யுத்தம் (The Wars of the Ross த . க .) என்று பெயர். யார்க் கோமகன் ரிச்சர்ட்டின் மகன் எட்வர்டு என்பவர் யார்க் கட்சியினருக்குத் தலைமை பூண்டு போர் புரிந்து லங்காஸ்டர் வமிசத்தைச் சேர்ந்த VI-ம் ஹென்ரியிடமிருந்து இங்கிலாந்தின் அரசுரிமையைப் பெற்று 1461 ஆம் ஆண்டு IV-ம் எட்வர்டு ஆனார். எனினும் இவரை ஆதரித்த வார்விக் பிரபு 1469 ஆம் ஆண்டு லங்காஸ்ட்டர் பக்கத்தில் சேர்ந்திடவே, இவர் நாட்டைவிட்டு ஹாலந்திற்கு ஓடினார். இரண்டாண்டுகள் சென்றபின் இவர் பெரும்படையுடன் திரும்பி வந்து பார்னெட், டியூக்ஸ்பரி என்னுமிடங்களில் 1471 ஆம் ஆண்டு பகைவரை முறியடித்து, இழந்த அரசுரிமையைப் பெற்றார். இவர் மன்னர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தி, டூடர் மன்னர்களின் ஏகாதிபத்தியத்துக்கு அடிகோலினார்.

எட்வர்டு V (1470-1483) File:King Edward V from NPG.jpg இங்கிலாந்து மன்னர். IV-ம் எட்வர்டின் மகன். தந்தைக்குப்பின் பட்டத்துக்கு வந்தார். வந்தபோது வயது பதின்மூன்று. ஆனால், பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே முடிசூட்டு விழா நடைபெறுமுன் எட்வர்டையும் இவருடைய தம்பி யார்க் பிரபுவையும் இவருடைய சிறிய தந்தை கிளஸ்ட்டர் பிரபு லண்டன் டவரில் (The Tower of London) சிறையிலிட்டுக் கொலையுண்ணுமாறு செய்தார். அதன்பின் கிளஸ்ட்டர் பிரபுவே இங்கிலாந்தின் ஆட்சியை மேற்கொண்டார்.

எட்வர்டு VI (1537-1553) File:Circle of William Scrots Edward VI of England.jpg டூடர் வமிசத்தைச் சேர்ந்த ஆங்கில அரசர். VIII-ம் ஹென்ரியின் மூன்றாவது மனைவியாகிய ஜேன் சீமருக்குப் பிறந்தவர். பிராட்டெஸ்டென்டு மதத்தினர். இவர் உறவினரான எட்வர்டு சீமரே அரசியல் அலுவல்களைக் கவனித்து வந்தார். தாமஸ் கிரான்மர் எழுதிய முதல் பிரார்த்தனை என்னும் நூலும், மத சம்பந்தமான 39 சட்டங்கள் (Statute of Thirty Nine Articles) என்னும் நூலும் இவர் காலத்திலே வெளிவந்தன.

எட்வர்டு VII (1841-1910) File:King-Edward-VII (crp ret).jpg சாக்சி - கோபர்க் வமிசத்தைச் சேர்ந்தவர். இவர் விக்டோரியா மகாராணியின் மூத்த மகன். 1901 விக்டோரியா இறந்த பின் முடி சூடினார் . ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், எடின்பரோ கல்லூரிகளிற் படித்தவர். பிறகு, பல முக்கிய நாடுகளைச் சுற்றிப் பார்த்துவந்தார். முதன்முதல் குடியேற்ற நாடுகட்குச் சென்ற இங்கிலாந்து இளவரசர் இவர்தாம் . 1863 ஆம் ஆண்டு பிரபுக்கள் சபையில் உறுப்பினரானார் . இவர் கலை வளர்ச்சியில் ஆர்வங் கொண்டவர். இசைக் கல்லூரி ஒன்றை நிறுவினார். விளையாட்டுக்களிற் பிரியம் உடையவர். குதிரைப் பந்தயங்களுக்கு ஆதரவு அளித்தவர்.

இவருக்கு மக்கள் ஐவர் . இவருடைய இரண்டாம் புதல்வரான ஜார்ஜ் பிரெடெரிக் என்பவர் V-ம் ஜார்ஜாக 1910 ஆம் ஆண்டு பட்டத்துக்கு வந்தார்.

எட்வர்டு ஏரி மத்திய ஆப்பரிக்காவிலுள்ளது. ஆல்பெர்ட்டு எட்வர்டு நியான்சா என்பது இதன் பழம் பெயராகும். கடல் மட்டத்துக்கு மேல் 3000 அடி உயரத்தில் ஆல்பர்ட்டைன் பிளவுப் பள்ளத்தாக்கில் உள்ளது. இதன் நீளம் 44 மைல், அகலம் 3 மைல்.

எட்வர்டு. பக்தசீலர் (Edward the Confessor 1002-1066) இங்கிலாந்தை 24 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். வெஸ்ட்மின்ஸ்டர் கோயிலைக் கட்டினார். அரசியலில் தம் கவனத்தை அதிகமாகச் செலுத்தவில்லை. துறவு வாழ்க்கையை மேற்கொண்டு ஒழுகலானார். இவர் இறந்து சு. 100 ஆண்டுகட்குப்பின்னர் III-ம் அலெக்சாந்தர் என்னும் போப் இவருக்குப் பக்த சீலர் என்னும் பட்டத்தை அளித்துப் பாரட்டினார்.

எட்வர்டு VIII File:Prince-Edward-Duke-of-Windsor-King-Edward-VIII (retouched).jpg

எலும்பு நோய்கள் தொகு

எலும்பு க்ஷய ரோகம் : பாசிலஸ்கள் மூச்சுறுப்புக்களிலிருந்தாவது, வயிற்றிலுள்ள நிணநீர் சுரப்பிகளிலிருந்தாவது, இரத்தத்தின் வழியாக எலும்புகளில் நோயை உண்டுபண்ணும். நோயுண்டான இடத்தில் எலும்பு அரிக்கப்படும். முக்கியமாகக் குழந்தைகளையும் இளவயதினரையும் இது தாக்கும். முதியவரும் சில சமயம் தாக்குற நேரிடும். மாறுதல்கள் மெல்ல வளர்ந்து, உளுத்தல், சீழ்க்கட்டி, நார்த்தசையாதல் ஆகியவை உண்டாகும். எலும்பின் எல்லாப் பாகங்களும் தாக்கப்படலாம். சிறு எலும்புகள் முழுமையும் வீங்கும். முதுகெலும்பு, இடுப்புப்பூட்டுப் போன்ற இடங்களில் சிதைவு உண்டாகிக் கூன், கால்குறுகல் போன்ற கோணல்கள் ஏற்படும். இத்தகைய நோய்களுக்குப் போதுமான ஓய்வு, சரியான இடத்தில் வைத்துக் கட்டல், தகுந்த 'உணவு உண்ணச் செய்தல், காற்று, வெளிச்சம் உள்ள இடங்களில் படுக்கவைத்தல் முதலியன சிகிச்சை முறைகளாகும்.

எலும்புக் கிரந்தி (Syphilis) : கிரந்தி நோயின் (த.க.) இரண்டாம் மூன்றாம் நிலையில் இரத்தத்தின் வழியாக நோய் பரவி எலும்பில் தொற்று ஏற்படும். அதனால் வலி, எலும்பின் மேற்சவ்வில் கட்டி, எலும்பு முழுமையும் வீக்கமடைதல், எலும்பின் நடுவில் அழற்சி, குழந்தைகளின் இளங்குருத்தெலும்பு அழற்சி முதலியன தோன்றும். ஏற்ற ரண சிகிச்சையுடன், தொற்றைப் போக்கடிக்க இதுவரை அயோடின், ரசம், பிஸ்மத்து, ஆர்சனிக்கு இவைகளினின்று செய்யப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன. இப்போது மிகவும் சிறப்பான மருந்தாக பெனிசிலின் ஊசி குத்தப்படுகிறது. வீ. கே. வெ.

கழலைகளும் நீர்க்கட்டிகளும் (Tumours and cysts) : மற்ற உறுப்புக்களுக்குப் பரவி, உயிருக்குக் கெடுதியை உண்டுபண்ணாத கட்டிகள் (Innocent tumours), வேறு உறுப்புக்களில் விரைவாகப் பரவி உயிரைப் போக்கும் கொடிய கட்டிகள் (Malignant t.) என இருவகை எலும்புக் கட்டிகள் உள்ளன.

காண்ட்ரோமா (Chondroma) : இது குருத்தெலும்பில் தோன்றும் கெட்டியான கட்டி ; எவ்வித உபத்திரவத்தையும் உண்டாக்காது. இக்கட்டியில் கால்சியம் சேர்ந்து எலும்பாக மாறிவிட்டால், இதைக்கான் சல்லஸ் ஆஸ்ட்டியோமா (Cancellous osteoma) என்பர். இதற்குரிய சிகிச்சை கட்டியைத் சுரண்டி விடுவதாகும்.

ஆஸ்ட்டியோஜெனிக் சார்க்கோமா (Osteogenic sarcoma) : இது எலும்புகளில் தோன்றும் கட்டிகள் எல்லாவற்றிலும் மிகக் கொடிய கட்டி. இது எலும்பின் மேல் ஒட்டி இருக்கும் எலும்புறையிலும் எலும்பினுட்புறத்திலும் தொடங்குகிறது. நீண்ட எலும்புகளின் கடைப்பாகத்தில் பெரும்பாலும் முழங்கால் முட்டிக்கருகில் கட்டி தோன்றி, தொடங்கும்போதே மிக்க துன்பத்தைக் கொடுக்கும். இது விரைவாக வளர்ந்து, இரத்தத்தின் வழியாகப் பல இடங்களுக்குப் பரவி உயிரை மாய்க்கக் கூடியது. இளவயதினரிடம் இந்நோய் காணப்படுகிறது. கட்டி உள்ள இடத்துக்கு மேலாக உறுப்பை வெட்டி எடுத்தல் முறை கையாளப்படும், நோயின் போக்கை முன் கூட்டி அறிதல் கடினம். ஆயினும் மிகுந்த துன்பம் தரும் உறுப்பை வெட்டி நீக்குவதால் நோயாளியின் துன்பம் குறையும். நோயாளி உறுப்பு நீக்கத்துக்கு இணங்காவிட்டால் ஆழ்ந்த எக்ஸ்-கதிர்ச் சிகிச்சையால் நோயாளிக்குச் சிறிது துன்பம் குறையும்.

ஆஸ்ட்டியோ கிளாஸ்ட்டோமா (Osteoclastoma): இக்கட்டி முழங்கால் முட்டிக்கருகில் எலும்பின் கடைப்பாகத்தில் தொடங்கும். முப்பது வயதுக்குமேல் ஐம்பது வயதுக்குட்பட்டவர்களிடம் இந்நோய் காணப்படுகிறது. உட்பக்கமுள்ள எலும்பை அழித்து, வெளிப்புறம் புதிய எலும்பை உற்பத்தி செய்து கொண்டே பருத்து வளரும். இக்கட்டி கண்ட இடத்தில் எலும்பு மெல்லியதாகிவிடுவதால் அது அழுத்தினால் முட்டை ஓட்டைப்போல் ஒடிந்து ஒலியுண்டாகும். இக்கட்டி மற்ற இடங்களுக்குப் பரவுவது அருமையாயினும், சிகிச்சை செய்வதில் தாமதம் ஏற்பட்டால் சில சமயம் சார்க்கோமாவாக மாறி, உயிருக்கு ஆபத்து உண்டாக்கலாம். ரணசிகிச்சை செய்யக் கூடியதாயிருந்தால் சுரண்டிவிடுவது நல்ல பயன் தரும். ரணசிகிச்சை செய்ய முடியாத நிலையிலிருந்தால் ஆழ்ந்த எக்ஸ்-கதிர்ச்சிகிச்சை முறையையே செய்யவேண்டும்.

பலகட்டி மைலோமா (Multiple myloma): இந்தக் கட்டிகள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது. மார்பெலும்புகளிலும், அதிகப்படியாகத்தலையெலும்புகளிலும் இடுப்பெலும்புகளிலும் இக்கட்டிகள் தோன்றுகின்றன. ஒரே கட்டி பல இடங்கட்குப் பரவுகிறதா அல்லது பல இடங்களில் ஒரே காலத்தில் கட்டிகள் உண்டாகின்றனவா என்று சொல்வதற்கில்லை. மிக்க வலி கொடுக்கும் இக்கட்டிகள் எலும்புகளை அழித்து விடுவதால் அவைகள் ஓடிந்துவிடும். கட்டிகளை ரண சிகிச்சை, எக்ஸ்-கதிர்ச் சிகிச்சை, ரேடியம் சிகிச்சை முதலிய முறைகளால் குணப்படுத்தலாம். பிராஸ்டேட்டு, சிறுநீரகம், முலை. வயிறு முதலிய உறுப்புக்களில் தோன்றும் புற்று (Cancer த. க.) என்னும் கொடிய நோய் எலும்புகளுக்குப் பரவிக் கட்டிகளை உண்டுபண்ணும். இப்புற்றுக் கட்டிகள் பொறுக்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும். ரண சிகிச்சை, ரேடியம் சிகிச்சை முதலிய முறைகளால் அவற்றைக் குணப்படுத்தலாம். நோயின் போக்கை முன்கூட்டி அறிய இயலாது. அதனால் கடுமையான எலும்பு நோயைத் தணிப்பதும், எலும்பு முரிவுகள் போன்ற சிக்கல்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுமே செய்யக்கூடிய முக்கியமான சிகிச்சை முறைகள். கதிரியக்க பாஸ்வரம், ஸ்டிரிபாமிடைன் (Stribamidine), யுராத்தேன் (Urathane) ஆகியவை நோவைத் தரும் அறிகுறிகளை நீக்கப் பயன்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rabiyathul/மணல்தொட்டி&oldid=2890227" இலிருந்து மீள்விக்கப்பட்டது