படிமம்:சுந்தரமகாலிங்கம் கோயில்.jpg

[1]

சிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி..!

நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்.பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேவத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர்பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது. இதுதான்சதுரகிரியின் நுழைவாசல். இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்தகாட்டுப்பாதையில் (சாலை வசதி கிடையாது. பாதை கரடுமுரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

சதுரகிரி உச்சிக்கு செல்லமூன்று பாதைகள்இருந்தாலும் தாணிப்பாறைபாதையே பக்தர்களுக்குஉகந்தது. எனினும்இவ்வழியே பயணப்படுவோர்பருவகாலச் சூழ்நிலையைஅறிந்து தகுந்தமுன்னேற்பாடுகளுடன்செல்வது நல்லது.மலைப்பாதையின் குறுக்கேசில ஆறுகளில் மழைக்காலத்தில் வெள்ளம்பெருக்கெடுத்து ஓடும்.எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்றசூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காதுஎனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளைகடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம்இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையேஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையானமூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்துஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார்சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில்குடிகொண்டுவிடுகிறார்.

மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும்.வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன்,ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர்சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கெனஅவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம்காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும்இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும்இயலாத ஒன்றாகவே உள்ளது.

மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர்,கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர்,இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர்,காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம்கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேசபூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்குகாணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில்அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில்மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள்சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போதுஇங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும்பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம்கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும்உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள்நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்)பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல்வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்றுநினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம்எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்துநடக்க ஆரம்பிக்கின்றன.

அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SARAVANAN_UTHAYASURIAN&oldid=2086934" இலிருந்து மீள்விக்கப்பட்டது