கைத்தறி நெசவுக்கலை


தறி என்பது ஆடை தயாரிக்க பயன்படும் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் கருவியாகும். ஒரு காலத்தில் தறி ஓடும் ஓசை காஞ்சிபுரம் தெருக்கள் தோறும் கேட்கும். தனித்தனி நூல்களை இறுகப் பிணைத்து அழகிய ஆடையாக்கி விடும் கைத்தறி கலை. கைத்தறியில் கைலி உற்பத்தி செய்ய. தெருவில் பாவு போட வேண்டும். அதை உருளையில் சுற்றி, தறியில் பொருத்தி நெய்ய வேண்டும். அதற்கான ஊடை நூலை டப்பாவில் சுற்ற வேண்டும். சேலையில் வடிவங்கள் வரும் இடங்களில் வழக்கமான இழைகளுடன் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்துகிறார்கள். இது சேலைக்குப் புது பொலிவை அளிப்பதாக அமைகிறது.. தற்போது ஒரு சேலையில் பருத்தி இழைகளுடன் சுமார் 40 சதவீத அளவுக்குப் பனை ஓலை இழைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே வகை நூல் இல்லை. அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது

ஆலை என குறிப்பிடப்படும் பெரிய மூங்கில் பிளவுகளால் செய்யப்பட்ட உருளையில் நூலைச் சுற்றுகின்றனர். நூல் முப்பது சிறு உருளைகளிலிருந்து பெரிய உருளைக்குச் செல்லும். இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு ஏதுவாக கடிகாரச் சுற்றில் ஒன்று, எதிர் சுற்றில் ஒன்று என பெரிய உருளை அறுபதாகப் பிரிக்கப்படுகிறது. இப்பணியைப் பெரும்பாலும் பெண்களே செய்கின்றனர். மாற்றி மாற்றி சுற்ற வேண்டும் என்பதால் எந்த இடத்தில் மாற்ற வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஆரக்காலில் சிவப்பு வண்ணத் துணியைச் சுற்றிவைத்துள்ளனர். இவ்வாறு சுற்றப்பட்ட நூல் துவைச்சுப் பட்டறைக்குச் (வண்ணக் கஞ்சி இருக்கும் தொட்டி) செல்கிறது அங்கு கஞ்சி ஏற்றி நூலை விறைப்பாக்குகின்றனர். பச்சரிசி மாவைக் காய்ச்சி கஞ்சியாக்கி நீளமாக மாட்டப்பட்டிருக்கும் நூலில் தூரிகையால் கஞ்சியைத் தூவுகின்றனர். தூவப்பட்ட கஞ்சி நூலின் மறுபக்கத்தை நனைப்பதற்காக பில்லேறு எனப்படும் விழலின் வேரால் செய்யப்பட்ட பெரிய தூரிகையை நூலின் மீது அழுத்தியபடி இருவர் இழுத்துச்செல்கின்றனர் அதன் பிறகு ஊர்தியைச் சுழற்றி அசைத்து கஞ்சிப்பசையை உலர்த்துகின்றனர். இவ்வாறு இரு முறை செய்த பிறகு சிறிது தேங்காய் எண்ணெயைத் தூவி நூலை வழுவழுப்பாக்கி முறுக்கேற்றி தறிக்கு அனுப்புகின்றனர்.

நெய்யப்படவிருக்கும் துணிகளின் நிறங்களுக்கேற்ற நூல்களை அச்சில் பிணைத்து, அள்ளிப்பிடித்து சிக்கலில்லாமல் தனித்தனி இழையாக நீவி அதன்பிறகு தறியில் பிணைக்கின்றனர். குறுக்கு இழைக்கான நூல்கள் தார் எனப்படும் சிறு உருளையில் சுற்றப்பட்டிருக்கிறது. அதனை மரத்தாலான நாடா எனப்படும் கருவிக்கு உள்ளிருக்கும் பித்தளைப் பட்டைக்குள் பொருத்தி நெய்யத் தொடங்குகின்றனர். பல வண்ண ஆடை என்றால் குறுக்கு இழைகளை அதற்கேற்ப சரியான நேரத்தில் அவ்வப்போது மறவாமல் மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இப்பணி பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் நெய்பவரின் நினைவாற்றலுக்கும், கவனம் சிதையாமைக்கும் மிகப்பெரிய சவாலாகும். இப்படி நூலாடும் தறியில் தங்கள் கைத் திறத்தாலும் கடும் உழைப்பாலும் ஓர் ஆடையை உருவாக்கி நாம் உடுத்தத் தருகின்றனர் ஒவ்வொரு நேசவாளரும். கைத்தறிகள் நெசவால் தனித்துவமாக தரைவிரிப்புகள், விரிப்புகள் முதலான அலங்காரத் துணிகள் போன்ற சிறு அளவிலான துணிகளைத் தனிப்பயனாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் அதேநேரத்தில் முற்றிலும் லேசான எடை கொண்ட துணிகளை செய்யவும் முடிகிறது. கற்றாழை, சணல், வாழை, மூங்கில், பைனாப்பிள் உள்ளிட்ட பல வகையான இயற்கை நார்களைக் கொண்டு நெசவு செய்கின்றனர். புடவை, சட்டை, சுடிதார் வகைகள், திரைச் சீலைகள் என பல வகை துணிகளை நெசவு செய்கின்றனர். இதில் கற்றாழையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் புடவைகள் மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. இத்தகைய துணி வகைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. வெளிநாடுகள், பிரபலமான ஜவுளி நிறுவனங்களில் இருந்தும் கேட்கின்றனர். இருப்பினும், போதிய இடவசதி, புதிய உபகரணங்கள் வாங்க வசதியின்மை காரணமாக குறிப்பிட்ட அளவுக்குமேல் இவர்களால் உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளனர். நெசவுத் தொழில் நலிவடைந்து வருவதால், மாதம் 6,000 ரூபாய் சம்பாதிப்பதே பெரிதாக உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் நட்டத்தில் இயங்குவதால், போனஸ் என்பது நெசவாளர்களுக்கு இவர்களுக்கு கனவாகிவிட்டது. கூட்டுறவு சங்கங்களில் இவர்கள் வாங்கிய வீட்டிற்கான தவணைத் தொகையை செலுத்த முடியவில்லை. அத்துடன் வீட்டையும் புதுப்பிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சொற்பமாய் ஓடிக் கொண்டிருக்கும் தறிகள் கூட அரசாங்கத்தின் இலவச வேட்டி சேலை சீருடைத் திட்டத்தை நம்பியே சோகமாய் சத்தமிடுகின்றன. இவர்களின் முனகல் சப்தமாகவே தறி ஓடும் ஓசையாக நமக்குக் கேட்கிறது.

இவ்வளவு சிறப்பும் பழமையும் கொண்ட கைத்தறி தொழில் நசிந்து – நெசவுத் தொழிலாளிகள் நாலாபுறமும் வேறு தொழில்களில் சிதறிக் கிடக்கின்றனர் என்பதை எண்ணும்போது மனம் கனக்கிறது.

நெசவுத் தொழில்.:-

நெசவு என்பது துணிகள் தயார் செய்வது.

வியாபாரிகள் ஒரு துணியை வாங்க போகும் பொழுது அந்த துணிகளின் தரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள பாவு நூல் என்ன ஊடை நூல் என்ன அதன் எடை எவ்வளவு என்று கேட்டு அதன் தரத்தை தெரிந்து கொள்வார்கள்.

இன்னும் துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்த துணியின் பாவு நூல் எந்த வகையான நூல் என்ன கவுன்ட், ஊடை நூல் என்ன நூல் என்ன கவுண்ட், ரீட், பிக் எவ்வளவு, அகலம், நீளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டால் அந்த துணிக்கு உபயோகப் படுத்திய நூலின் எடையை கண்டு பிடித்து விடலாம். அந்த நூலுக்கு உண்டான விலையையும் நெய்யும் கூலியையும் சேர்த்து கொண்டால் அந்த துணியின் அடக்க விலையை தெரிந்து கொள்ளலாம்.

1s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 1.65 மீட்டர் 2s கவுண்ட் காட்டன் நூல் 1 கிராம் எடை 2.30 மீட்டர் இதை வைத்து அனைத்து கவுண்டின் நூலின் எடையையும் கண்டு பிடித்து விடலாம்.

கவுண்ட் - நூலின் திக்னஸ்குண்டான அளவு எண் [ ஓவ்வொரு நூலுக்கும் ஒரு எண் இருக்கும். உதாரணம் 10s, 20s, 30s, 2/20s, 2/30s,

ரீட் :- பாவு நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை பிக் :- ஊடை நூல் ஒரு இன்ஞ்சில் இருக்கும் இழைகளின் எண்ணிக்கை

பாவு நூல் :- தேவையான அகலத்திற்கு நூல்களை வைத்து 10, 15 சேலைகளோ, வேஷ்டிகளோ வரும் அளவிற்கு நீளமாக நூல்களை ஒரு உருளையில் இருக்கமாக சுற்றி வைப்பது பாவு எனப்படும்.

ஊடை நூல்:- பாவு நூலில் குறுக்காக பின்னப்படும் நூல் ஊடை நூல் எனப்படும்.


கம்பை:- பாவு நூல் 2000 இழைகள் என்றால் அந்த நூல் வரிசையில் ஒன்று விட்டு ஒன்றாக 1, 3, 5, 7, 9 என்று 1000 இழைகள் ஒரு கம்பையிலும். 2, 4, 6, 8, 10 என்று ஒன்று விட்டு ஒன்றாக அடுத்த கம்பையிலும் வரும். இந்த கம்பைகள் மேலும் கீழும் நகர்த்தப்படும் பொழுது பாவின் மொத்த இழைகளில் பாதி மேலும் பாதிநூல் கீழும் நகரும் இதன் இடையே குறுக்காக ஊடை நூல் செலுத்தி துணி உருவாக்கப் படுகிறது.

சாதாரண வேஷ்டி டிசைனுக்கு இரண்டு கம்பைகளில் மட்டுமே இழைகள் பிணைக்கப்படும். டிசைனுக்கு தகுந்தபடி இந்த கம்பைகள் 2 லிருந்து 10 வரை இருக்கும். அதிக பட்ச டிசைன்கள் 4 அல்லது 6 கம்பையில் முடிந்து விடும்.

அச்சு பினைப்பு:- அச்சு பினைப்பவர்களின் வேலை டிசைனுக்கு தகுந்தபடி எத்தனையாவது இழை எந்த கம்பையில் கோர்க்க வேண்டும் என்று எண்ணி, எண்ணி இழைகளை கோர்ப்பவர்களே அச்சு பினைப்பவர்கள்

நெசவு:- பாவு நூலில் ஊடை நூலை வித்தியாசமான முறைகளில் பின்னி டிசைன்களை உருவாக்குவதே நெய்தல்

நெய்தல் முறையானது 4000 வருடங்களுக்கு முன் தொடங்கப் பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.

முதலில் கைகளினால் நூல் பின்னப்பட்டு துணி உருவாக்கப் பட்டது.

பின் நெய்வதை வேகபடுத்த மனித ஆற்றலினால் இயங்க கூடிய கைத்தறி கண்டு பிடிக்கப்பட்டது. இதில் ரேப்பியர் தறி வகைகளில் நான்கு விதம் இருக்கிறது. இதில் இரண்டு நாடாக்கள் ஒரே நேரத்தில் ஓடும் தறிகளும் உண்டு. இந்த தறி வகைகளில் ஓரம் இரண்டு பக்கமும் நூல் வெட்ட படுவதால் சாதா கரை வராது. வெட்டி தைக்கப்படும் துணி வகைகள் இதில் அதிகம் நெய்யப் படுகிறது.

புரொசக்டர், ஏர்ஜெட், வாட்டர் ஜெட் :- இது நாடா இல்லாத தறி வகைகள். சரோ வகை தறிகள் ஒரு நிமிடத்திற்கு 200 முறை நூல் ஊடையில் ஏற்றப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivajisankar&oldid=2140201" இலிருந்து மீள்விக்கப்பட்டது