ஐ.வீரக்குமாரன், 1983ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பிறந்த ஒரு பத்திரிகையாளர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த த.ஐயாத்துரை அவர்கள் மற்றும் வனிதா அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்த வீரக்குமாரன், பெங்களூரில் பல்வேறு முன்னணி நாளிதழ்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இப்போதும் பெங்களூரிலுள்ள, முன்னணி ஊடகம் ஒன்றில் மூத்த பத்திரிகையாளராக பணியாற்றிவருகிறார்.

கர்நாடகா மற்றும் பெங்களூர் சார்ந்த முக்கிய செய்திகளை செய்தி தொலைக்காட்சி சேனல்களுக்கும் வழங்கிய அனுபவம் உள்ளவர் வீரக்குமாரன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டம் பயின்ற வீரக்குமாரன், அப்போதே பத்திரிகை துறை சார்ந்த கூடுதல் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Veerakumaran.I&oldid=3457006" இலிருந்து மீள்விக்கப்பட்டது