என் பெயர் தியாகசீலன். சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். நான் மருதாணி மாத இதழின் ஆசிரியர். நான் என் தொடக்க கல்வியை நாகர்கோவிலில் கோட்டார் புனித சேவியர் நடுநிலைப்பள்ளியிலும் , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி படிப்பை கார்மல் மேல்நிலைப்பள்ளியிலும்,கல்லூரி படிப்பை சிவந்தி ஆதித்தனார் கல்லூரியிலும் படித்தேன். எனது மனைவி எழுத்தாளர் திருமதி.அல்போன்சா. எனது குழந்தைகள் மூத்தவள் ஜெயா.ஊடகவியல் படிக்கிறார். மகன் பிகாம் படிக்கிறான். எனது பெற்றோர் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், திரு.ஜெயபாலன்-திருமதி.ஜோஸ்பின். மலையாள மொழி பேசும் நாட்டில் நாங்கள் தமிழ் வளர்க்கும் சீரிய பணியை செய்து வருகிறோம். எங்கள் இதழில் அரசியல், சினிமா, மதம் இவை இல்லை. சாதனையாளர்களும், ஆசிரியர்களையும், மாணவர்களையும் ஊக்குவிப்பதுதான் எங்களது நோக்கம்.எங்களது மருதாணி மாத இதழ் கேரளமாநிலம் திருவனந்தபுரத்திலருந்து வெளிவருகிறது. https://m.facebook.com/story.php?story_fbid=4277811535568303&id=100000184973519

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Wikithyaga&oldid=3147296" இலிருந்து மீள்விக்கப்பட்டது