{{Template:Welcome|realName=|name=குழுந்தலாயி வரலாறு 16:17, 14 பெப்ரவரி 2023 (UTC)

குழுந்தலாயி அம்மன் வரலாறு

திருச்சியை காக்கும் ஏழு எல்லைகாவல் தெய்வங்களில் அதிக மக்களால் வணங்கப்பெறும் குழுந்தலாயி அம்மனின் அருட்கதையிது. ஏழு ஊர்களில் திருவிழா வைத்து கொண்டாடப்படுபவர் நமது குழுந்தலாயி ....

பண்யையகால உயையூர்தான் இன்றைய திருச்சிநகரம். இன்றோ காலத்தால் சுருங்கி திருச்சியின் ஒருபகுதியாக விளங்குகின்றது. சோழ பேரரசின் எல்லை காவல் தெய்வங்களாக கன்னிமார் தெய்வங்கள் ஏழுபேர் அரணாக அமர்ந்துகாத்த புண்ணியபூமி நமது உறையூர். உலகத்து உயிர்களின் புண்ணியங்கள் உறையும் ஊர் இந்த உறையூர். காவிரிபடுகையின் செழிப்பில் ஒருகரையில் அரங்கனும், ஜம்புகேஸ்வரரும் , மறுகரையில் தாயுமானவரும், வெக்காளியும், அரங்கத்துநாச்சியும் அமர்ந்து அருட்கோலோச்சும் புண்ணியநகரம் இந்தஉறையூர்.

வாணிபம் சிறக்க புகாரும் (பூம்புகாரும்) வளமை செழிக்க உறையூரும் என சோழர்களால் கொண்டாடப்பட்டது இந்த உறையூர்.

இத்தயகய உறையூர் நகரத்தை காவல் செய்யும் எல்லை பிடாரிகள் (காளியின் அம்சமாக) சகோதரிகளான ஏழுபேர் மளையாள மந்திரவாதி ஒருவனால் பாதிக்கப்பட்டு வாய்கால் கரைகளில் ஒதுங்கி கோயில் கொண்டு மீண்டும் அந்த மந்திரவாதியை கருவறுத்த கதைதான் இவர்களின் மூலக்கதை.


குழுமாயி - ஆறுகண் ,புத்தூர் ( உயையூருக்கு தெற்கு எல்லையில் )

குழுந்தலாயி- கிழக்கு எல்லையில்- உயையூர் செங்குளத்தான் கோவில்( தற்தபாழுது தில்லைநகர்)

செல்லாயி- பாண்டமங்கலம்- உறையூருக்கு வடக்கு எல்லையில் ( வெக்காளியம்மன் கோவில் செல்லும் வழியில்)

காராலாயி - உயையூருக்கு மேற்க்கு எல்லையில் -(சோழன் பாறை அருகில்)

உக்கிரகாளி - தென்னூர் - பைப்பாஸ் உறையூருக்கு தென்கிழக்கு திசையில்..

இளமாயி - சோமரசம்பேட்டை- உறையூருக்கு தென் மேற்க்கு திசையில்..

இரண்யாயி - திருவாணைக்காவல் பைப்பாஸ்.உறையூருக்கு வடகிழக்கு திசையில். என ஏழு தெய்வங்களும் அருளாட்சி செய்யும் பெருமைக்குறியது நமது திருச்சி நகரம்.

இத்தகைய சிறப்பு கொண்ட தெய்வங்களில் குழுந்தலாயி அம்மனின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்...

மலையாள தேசத்தில் அழகிய பனிபோர்த்திய மலைகிராமம் ஒன்றில் தனியாக வசித்துவந்தார் ஓர் அந்தனர். கடுமையான பிரம்மச்சாரியான அவர் தனது மாந்திரீக சக்திகளை ஒருங்கிணைத்து தன் கட்டுப்பாட்டில் இருக்கத்தக்க துடிப்பான தெய்வங்களை அவதானித்து 21 பஞ்சலோக தெய்வ சிலைகளை உருவாக்கி வழிபட்டு வந்தார். அந்தனரால் உருவாக்கப்பட்ட பஞ்சலோக தெய்வங்கள் 21 ல் துடியான ஆண் தெய்வங்கள் 7 துடியான பெண் தெய்வங்கள்  7 சகோதரிகளான கன்னிமார்கள் 7 பேர் .

இந்த தெய்வங்களை தனது மந்திர சக்தியால் அடிமைப்படுத்தி தனது ஏவல் வித்தைகளுக்கு பயன்படுத்திவந்தார் அந்த அந்தனர். அவற்றின் சக்தி நாளுக்குநாள் பெருக பெருக அந்த மாந்திரீகனால் கட்டுப்படுத்த முடியாமல் திணற துவங்கினார்.

ஒரு அம்மாவாசை பூஜையின் போது கருப்பண்ணசாமி ஒன்டியாக அவரை எதிர்த்து எச்சரித்தார்.

இனி இத்தெய்வங்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என அறிந்தவன் அவர்களுக்குறிய பூஜைகள் மற்றும்  உபசரிப்புடன் ஓலைப்பெட்டிகளில் வைத்து காவிரியில் விட்டுவிட்டான்.

சோழர்களின் முடிசெழித்த காலத்தில் உறையூர் பெருங்குடிமக்களின் செம்மையான வாழ்வியலையும் உறையூரின் வளங்களையும் குறிக்கும் புநானூறு பாடல்களில் நுங்கும் நுறையுமாய் பொங்கிபாயும் பொன்னிநதியின் தீரமும், அதன் வேகத்தில் எழும் நீர்திவளைகள் காற்றில் பறந்து கடைவீதியில் அமந்திருக்கும் கீரைகாரியின் கீரைகள்மீது விழுந்து கீரைகள் வாடாமல் பாதுகாக்குமாம்.

காவிரிவெள்ளத்தில் அத்தகைய

ஓலைபெட்டிகளில் ஒன்று கரைஒதுங்கியது. பெருவளத்தானின் பொற்கால ஆட்சியில் வளமிக்க உறையூருக்கு புண்ணியமாய் மிதந்துவந்தாள் அன்னை குழுந்தலாயி.

மலையக மலையாள மாந்திரீகனால் அடைக்கப்பட்டு காவிரியில் விடப்பட்ட ஏழு ஓலைபெட்டிகளில் ஒன்று காவிரிகரையாம் அய்யாளம்மன் படித்துறையருகில் கரைஒதுங்கியது.

கால ஓட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீர்பாய்ச்சும் வாய்கால்வழியாக இன்றைய உறையூர் பகுதியை ஒட்டிய வயல்வெளிகளில் புதையுண்டு மறைந்தது.

வாணிபத்தில் செழித்த உறையூர் மக்களுக்கு திடீரென்றுஓரு பிரச்சனை முளைத்தது.

அக்காலத்தில் உறையூர் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டியவக்கப்பட்டிருந்த 6மாத ஆட்டுக்குட்டிகள் கழுத்தில் மட்டும் இருபல்லால் கடிக்கப்பட்ட தடையத்துடன் ரத்தம் மட்டும் உரிஞ்சப்பட்டு இறந்து கிடந்தன.

இதை கண்டு அஞ்சிய மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து ஊர்பெரியவர்களான

உயையூயரறசர்ந்த 7 பட்டரை (சாதிகூட்டத்தார்) முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பெரியமாரியம்மன் கோவில் பூசாரியிடம் குறிகேட்டனர். அதில் அவர் மந்தையிலமர்ந்த குழுந்தலாயிஅம்மன் தான் மிகுந்தபசியுைன் செங்குளத்து கரையில் தனது அண்ணனுடன் புதையுண்டுள்ளதாகவும், தமது எதிரியான ராவுத்தர் சமாதியிலமர்ந்தபடி இத்தயகய சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், தனக்கு சைவமாகவும், தனது அண்ணன் செங்குளத்து கருப்பருக்கு கிடா உதிரமும் படைத்து எங்கள் பசியை ஆற்றினால் அந்த ராவுத்தரை அடக்கி ஊருக்கு காவலாக இருந்து அருள்புரிவதாகவும் வாக்குதந்தார்.

இதனை தொடர்ந்து பெரியமாரியம்மன் கோவில் பூசாரியின் கேள்வியான குழுந்தலாயி வரலாற்றை திரண்டிருந்த மக்களின்முன் தன் திருமொழியாலே அறிவித்தார்.

காவிரியில் மிதந்து வயல்வெளியில் புதையுண்ட நான் ஒரு விவசாயியின் கடப்பாறையால் காயம்பட்டு வெளிப்பட்டதாகவும், அந்த விவசாயியின் இயளயமகளான பாப்பாத்தி மீதேறி குழந்தையாக வளர்ந்து தெய்வீக அம்சத்துடன் பருவமடைந்தாள் . பெற்றோருக்கு துணையாக வயல்வேலைக்கும் சென்றுவந்தாள். இவர்கள் வேலைசெய்த நிலங்களின் உரியமையாளர் ஓர் ராவுத்தர்.

மிகவும் முரடனான அந்த ராவுத்தர் குடிமயக்கத்தில் இளம் பெண்களை வேட்டையாடும் கொடூரன்.

ஒருநாள் என்னை வயலில் பார்த்தவன் தவறான எண்ணம்கொண்டான். பலமுறை அவனது பார்வையில் விழாமல் தப்பித்தாலும் வீடுவரை நீண்டது அவனது சீண்டல்கள். எனது தெய்வதன்மையை கூட உணராமல் அதிக தொந்தரவு தந்ததால் எனது அண்ணனான அரங்கநாதனை நினைத்து பூஜித்தேன். அவரும் ஒண்டிக்கருப்பாக அவதரித்து இரட்டை மலையிலிருந்து வந்திறங்கி செங்குளத்தான் என்ற பெயரில் எங்கள் வீட்டில் மறைந்திருந்தார். அந்த கொடிய இரவில் தள்ளாடி வந்த ராவுத்தன் எங்கள் வீட்டிற்க்குள் தன் தலயை நீட்டினான் . அண்ணன் செங்குளத்தான் கருப்பண்ணசாமி விஸ்வரூபம் கொண்டு தனது அரிவாளால் ராவுத்தரின் தலையை துண்டாக்கினார். அவன் உடலில்லிருந்து பீரிட்ட ரத்தம் செங்குளத்தில் விழுந்து சிகப்பாக மாற்றியது. பௌர்ணமி நிலவின் பிம்பம் செங்குளத்தில் விழுந்து அதுவும் சிகப்பாக காட்சியளித்தது.

ஓங்கி வளர்ந்த வன்னிமரம் தனது இலைகளை உதிர்த்து ராவுத்தரின் உடலை மண்ணுக்குள் புதைத்தது. அந்த ராவுத்தன் அடங்காபசி பிணியால் மாண்டவன். ஆதலால் எங்களுக்கு படையலிடும்முன் அவனுக்கு உதிரத்தால் எறிசோறிட்டு பின்புஎனக்கு சைவமாகவும், அண்ணனுக்கு ஆட்டுக்குட்டியின் உதிரத்யையும் படையல் வைத்தால் படைத்தவரின் வீட்டில் துர்மரணங்கள் ஏற்படாமல் காத்து, விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும் குடும்பம் தழைக்கவும் , அருள்பாலித்து உடனிருந்து காக்கவும் வாக்களித்தேன் என தனது வரலாற்றை பூசாரி மூலம் உலகிற்கு அறிவித்தார். அதன்படியே ராவுத்தரால் ஊருக்கு இடையூரு ஏற்ப்படாதிருக்க காப்புக்கட்டும் நாளில் பச்சை உதிரம் கலந்த வேட்டைச்சாறு இன்றளவும் வீசப்படும்.

ராவுத்தரின் சமாதியருகில் மேல்நோக்கி வீசப்படும் எறிசோறு ராக்கெட் வேகத்தில் விண்ணை நோக்கி பாயும் அதிசயம் இன்றும் நடைபெறுகின்றது. காப்புக்கட்டைத் தொடர்ந்து பதினைந்து நாளில் மறுகாப்பும், மறுநாள் செவ்வாய்க்கிழமை காளிஓட்டமும் நிகழும். மறுநாள் புதன் கிழமை சுத்தபூசையாகும்.

வியாழன் கிழமைதான் இந்த திருவிழாவின் முத்தாய்ப்பான ஒன்றாகும். இத்திருவிழாவில் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழாவானது மிக பிரபலமாக கொண்டாடப்படுகிறது. ஆட்டின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடிக்கும் நிகழ்ச்சிதான் குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியாகும். மருளாளியின் தோளில் கிளிரூபத்தில் அமர்ந்து செங்குளத்தானே அந்த இரத்தத்தை குடிப்பதாக ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு ஒன்றுகூடுகிறார்கள். குட்டிக்குடித்தல் திருவிழா அன்று, முதலில் தேரிலிருக்கும் ஓலை பிடாரியாக வீற்றிருக்கும் குழுந்தலாயிக்கு பூஜை நடைபெறும். பின்னர் முதலில் வெட்டப்படும் ஆட்டின் ரத்தத்தை தேர்காலில்லிட்டு தேரை வடக்கு நோக்கி நிலைநிறுத்துவர், பின்பு முதல் குட்டியாக அரசு சார்பில் சர்க்கார் குட்டி தரப்படும். மருளாளி ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சிக்குடிப்பார். அவரின் தோளில் குழுந்தலாயி அம்மனின் மாலையில் இருக்கும் இருகிளிகள் தான் இரத்தத்தை குடிக்கின்றன என்பது இந்த ஊராரின் பாரம்பரிய நம்பிக்கை. அதன்பின்னர் பட்டரைகாரர்கள் அடுத்து ஊராரின் குட்டிகளை குடிப்பார். இப்படி சர்கார் குட்டி குடிக்கும் வழக்கம் உருவான வரலாறு சுவாரஸ்யமான ஒன்றாகும்.

குழுந்தலாயிக்கு 7 ஊர்களில் திருவிழா நடக்கும். பணம் பெருத்த குழுமாயிக்கு 3 ஊர்களிலும், ஜனம் பெருத்த குழுந்தலாயிக்கு 7 ஊர்களிலும் திருவிழா என்பது உள்ளூர் சொலவடை.

அத்தகைய திருவிழாக்களில் ஒன்றான மட்டைக்காரத்தெருவில் அன்னை நிகழ்த்திய அதிசயத்தை பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மட்டைக்காரத்தெருவில் மருளாளி குட்டிக்குடிக்கும் நிகழ்வினை அருகிலுள்ள ஜெயில் கோபுரத்திலிருந்து வெள்யளக்கார அதிகாரி தொலைநோக்கியின் மூலம் திருவிழாவை கண்காணித்தார். அப்போது மருளாளியின் தோளில் அமர்ந்து ஆட்டின் உதிரத்தை குடிக்கும் கிளியைபார்த்து அதிர்ந்தார்.

வெறும் கண்களால் மருளாளி குடிப்பதையும், தொலைநோக்கியின் மூலம் காணும் போழுது கிளி குடிப்பதையும் கண்டவர் சற்று நேரத்தில் கண்களின் பார்வையை இழந்தார். குழுந்தலாயியின் சக்தியை உணர்ந்தவர் மருளாளியிடமும், அன்னையிடமும் மனமுறுகி வேண்டி மீண்டும் பார்யவயை வழங்கினார். அந்த பிரிட்டிஷ் அதிகாரி நன்றிப்பெருக்கில் இனி வரும் காலங்களில் குழுந்தலாயிக்கு முதல் குட்டியாக சர்க்கார் குட்டி என்ற பெயரில் வழங்க ஆணையிட்டார். இன்றளவும் சர்கார் குட்டி தந்தபிறகே பட்டையரகாரர்களின் குட்டிகள் வெட்டப்படுகின்றன. கரிகாலச்சோழனின் இளம்வயதில் அவனைக்கொல்ல நடந்த சதியில் அரண்மனை தீயிட்டுக்கொளுத்தப்பட்டது. அந்த சதியிலிருந்து கரிகாலனை மீட்டு காக்கும் பணியில் உயிரை விட்ட சாம்பவன் என்னும் ஆபத்துதவிக்கு ( அன்றை சோழ ராஜ்ஜியத்தில் மெய்காப்பாளன் பதவியின் பெயர் ஆபத்துதவி) எல்லை கோவில்களில் காவலனாக சிலைவத்து வழிபாடு செய்யப்பட்டது. இன்றும் குழுந்தலாயி கோவிக் அரசமரத்தடியில் சாம்பவமூர்த்தியின் சிலையை காணலாம்.

ஒரே குடும்பத்தினர் தான் மருளாளியாக இருக்க வேண்டும் என்ற மரபு கியையாது. யார் வேண்டுமானாலும் மருளாளி ஆகலாம் . எனினும் இதுவரை தேர்வான மருளாளிகள் வைக்கோல்காரத்தெரு படையாட்சி இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

இக்கோவிலை பொருத்தவரையில் திருவிழா காலத்தில்தான் புதிய மருளாளி தேர்ந்தெடுக்கப்படுவார். மருளாளியின் தொப்பி , இடைமணி ரத்தத்தை பிடிக்கும் வெள்ளி கிண்ணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் மறைத்து வைப்பார்கள். பிறகு அருள் வந்தவர் அந்த பொருட்கள் எங்கே இருக்கிறது என்று குறியெடுக்கவேண்டும். அப்படி யார் அருள் வந்து கண்டுபிடிக்கிறாறோ அவர் தான் மருளாளியாக தேர்வுசெய்யப்படுவார். இதோடு முடியாது அடுத்த கட்ட தேர்வும் நடக்கும், பெரிய அரிவாள் ஒன்றை வைத்திருப்பார்கள் மிகவும் கூர்யமயாக

3 1/2 அடி நீளம் கொண்ட அந்த 

அரிவாளின் கூரிய முனை மேல்நோக்கி இருக்கும்படிவைத்து அதன் இருபுறமும் ஆட்கள் பிடித்துக்கொள்வார்கள். மருளாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த கூர்யமயான அரிவாள் மீது ஏறி அருள் வாக்கு சொல்லவேண்டும். இப்படி வருபவர்தான் மருளாளியாக கொண்டாடப்படுவார். மருளாளி செங்குளத்தான் கருப்பரின் ரூபமாக வணங்கப்படுவதால் இவருக்கு இளநீர் படைத்து விபூதி பூசிக்கொள்வது விஷேசமாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்னையின் ஆக்ரோஷத்தை குறைக்க நான்காம் நாள் மஞ்சள் நீராட்டம் நிகழ்த்தி அடுத்த நாள் கோவிலுக்கு மீண்டும் குடிபோவார். இப்படியாக குழுந்தலாயி அம்மனின் வரலாறு சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்பு : பெரியமாரியம்மன் சேவா சங்க நண்பர்கள்.

குழுந்தலாயி வரலாறு தொகு

குழுந்தலாயி அம்மன் வரலாறு

திருச்சியை காக்கும் ஏழு எல்லைகாவல் தெய்வங்களில் அதிக மக்களால் வணங்கப்பெறும் குழுந்தலாயி அம்மனின் அருட்கதையிது. ஏழு ஊர்களில் திருவிழா வைத்து கொண்டாடப்படுபவர் நமது குழுந்தலாயி ....

பண்யையகால உயையூர்தான் இன்றைய திருச்சிநகரம். இன்றோ காலத்தால் சுருங்கி திருச்சியின் ஒருபகுதியாக விளங்குகின்றது. சோழ பேரரசின் எல்லை காவல் தெய்வங்களாக கன்னிமார் தெய்வங்கள் ஏழுபேர் அரணாக அமர்ந்துகாத்த புண்ணியபூமி நமது உறையூர். உலகத்து உயிர்களின் புண்ணியங்கள் உறையும் ஊர் இந்த உறையூர். காவிரிபடுகையின் செழிப்பில் ஒருகரையில் அரங்கனும், ஜம்புகேஸ்வரரும் , மறுகரையில் தாயுமானவரும், வெக்காளியும், அரங்கத்துநாச்சியும் அமர்ந்து அருட்கோலோச்சும் புண்ணியநகரம் இந்தஉறையூர்.

வாணிபம் சிறக்க புகாரும் (பூம்புகாரும்) வளமை செழிக்க உறையூரும் என சோழர்களால் கொண்டாடப்பட்டது இந்த உறையூர்.

இத்தயகய உறையூர் நகரத்தை காவல் செய்யும் எல்லை பிடாரிகள் (காளியின் அம்சமாக) சகோதரிகளான ஏழுபேர் மளையாள மந்திரவாதி ஒருவனால் பாதிக்கப்பட்டு வாய்கால் கரைகளில் ஒதுங்கி கோயில் கொண்டு மீண்டும் அந்த மந்திரவாதியை கருவறுத்த கதைதான் இவர்களின் மூலக்கதை.


குழுமாயி - ஆறுகண் ,புத்தூர் ( உயையூருக்கு தெற்கு எல்லையில் )

குழுந்தலாயி- கிழக்கு எல்லையில்- உயையூர் செங்குளத்தான் கோவில்( தற்தபாழுது தில்லைநகர்)

செல்லாயி- பாண்டமங்கலம்- உறையூருக்கு வடக்கு எல்லையில் ( வெக்காளியம்மன் கோவில் செல்லும் வழியில்)

காராலாயி - உயையூருக்கு மேற்க்கு எல்லையில் -(சோழன் பாறை அருகில்)

உக்கிரகாளி - தென்னூர் - பைப்பாஸ் உறையூருக்கு தென்கிழக்கு திசையில்..

இளமாயி - சோமரசம்பேட்டை- உறையூருக்கு தென் மேற்க்கு திசையில்..

இரண்யாயி - திருவாணைக்காவல் பைப்பாஸ்.உறையூருக்கு வடகிழக்கு திசையில். என ஏழு தெய்வங்களும் அருளாட்சி செய்யும் பெருமைக்குறியது நமது திருச்சி நகரம்.

இத்தகைய சிறப்பு கொண்ட தெய்வங்களில் குழுந்தலாயி அம்மனின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்...

மலையாள தேசத்தில் அழகிய பனிபோர்த்திய மலைகிராமம் ஒன்றில் தனியாக வசித்துவந்தார் ஓர் அந்தனர். கடுமையான பிரம்மச்சாரியான அவர் தனது மாந்திரீக சக்திகளை ஒருங்கிணைத்து தன் கட்டுப்பாட்டில் இருக்கத்தக்க துடிப்பான தெய்வங்களை அவதானித்து 21 பஞ்சலோக தெய்வ சிலைகளை உருவாக்கி வழிபட்டு வந்தார். அந்தனரால் உருவாக்கப்பட்ட பஞ்சலோக தெய்வங்கள் 21 ல் துடியான ஆண் தெய்வங்கள் 7 துடியான பெண் தெய்வங்கள்  7 சகோதரிகளான கன்னிமார்கள் 7 பேர் .

இந்த தெய்வங்களை தனது மந்திர சக்தியால் அடிமைப்படுத்தி தனது ஏவல் வித்தைகளுக்கு பயன்படுத்திவந்தார் அந்த அந்தனர். அவற்றின் சக்தி நாளுக்குநாள் பெருக பெருக அந்த மாந்திரீகனால் கட்டுப்படுத்த முடியாமல் திணற துவங்கினார்.

ஒரு அம்மாவாசை பூஜையின் போது கருப்பண்ணசாமி ஒன்டியாக அவரை எதிர்த்து எச்சரித்தார்.

இனி இத்தெய்வங்களை தன்னால் கட்டுப்படுத்த முடியாது என அறிந்தவன் அவர்களுக்குறிய பூஜைகள் மற்றும்  உபசரிப்புடன் ஓலைப்பெட்டிகளில் வைத்து காவிரியில் விட்டுவிட்டான்.

சோழர்களின் முடிசெழித்த காலத்தில் உறையூர் பெருங்குடிமக்களின் செம்மையான வாழ்வியலையும் உறையூரின் வளங்களையும் குறிக்கும் புநானூறு பாடல்களில் நுங்கும் நுறையுமாய் பொங்கிபாயும் பொன்னிநதியின் தீரமும், அதன் வேகத்தில் எழும் நீர்திவளைகள் காற்றில் பறந்து கடைவீதியில் அமந்திருக்கும் கீரைகாரியின் கீரைகள்மீது விழுந்து கீரைகள் வாடாமல் பாதுகாக்குமாம்.

காவிரிவெள்ளத்தில் அத்தகைய

ஓலைபெட்டிகளில் ஒன்று கரைஒதுங்கியது. பெருவளத்தானின் பொற்கால ஆட்சியில் வளமிக்க உறையூருக்கு புண்ணியமாய் மிதந்துவந்தாள் அன்னை குழுந்தலாயி.

மலையக மலையாள மாந்திரீகனால் அடைக்கப்பட்டு காவிரியில் விடப்பட்ட ஏழு ஓலைபெட்டிகளில் ஒன்று காவிரிகரையாம் அய்யாளம்மன் படித்துறையருகில் கரைஒதுங்கியது.

கால ஓட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீர்பாய்ச்சும் வாய்கால்வழியாக இன்றைய உறையூர் பகுதியை ஒட்டிய வயல்வெளிகளில் புதையுண்டு மறைந்தது.

வாணிபத்தில் செழித்த உறையூர் மக்களுக்கு திடீரென்றுஓரு பிரச்சனை முளைத்தது.

அக்காலத்தில் உறையூர் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கட்டியவக்கப்பட்டிருந்த 6மாத ஆட்டுக்குட்டிகள் கழுத்தில் மட்டும் இருபல்லால் கடிக்கப்பட்ட தடையத்துடன் ரத்தம் மட்டும் உரிஞ்சப்பட்டு இறந்து கிடந்தன.

இதை கண்டு அஞ்சிய மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதனையடுத்து ஊர்பெரியவர்களான

உயையூயரறசர்ந்த 7 பட்டரை (சாதிகூட்டத்தார்) முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பெரியமாரியம்மன் கோவில் பூசாரியிடம் குறிகேட்டனர். அதில் அவர் மந்தையிலமர்ந்த குழுந்தலாயிஅம்மன் தான் மிகுந்தபசியுைன் செங்குளத்து கரையில் தனது அண்ணனுடன் புதையுண்டுள்ளதாகவும், தமது எதிரியான ராவுத்தர் சமாதியிலமர்ந்தபடி இத்தயகய சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், தனக்கு சைவமாகவும், தனது அண்ணன் செங்குளத்து கருப்பருக்கு கிடா உதிரமும் படைத்து எங்கள் பசியை ஆற்றினால் அந்த ராவுத்தரை அடக்கி ஊருக்கு காவலாக இருந்து அருள்புரிவதாகவும் வாக்குதந்தார்.

இதனை தொடர்ந்து பெரியமாரியம்மன் கோவில் பூசாரியின் கேள்வியான குழுந்தலாயி வரலாற்றை திரண்டிருந்த மக்களின்முன் தன் திருமொழியாலே அறிவித்தார்.

காவிரியில் மிதந்து வயல்வெளியில் புதையுண்ட நான் ஒரு விவசாயியின் கடப்பாறையால் காயம்பட்டு வெளிப்பட்டதாகவும், அந்த விவசாயியின் இயளயமகளான பாப்பாத்தி மீதேறி குழந்தையாக வளர்ந்து தெய்வீக அம்சத்துடன் பருவமடைந்தாள் . பெற்றோருக்கு துணையாக வயல்வேலைக்கும் சென்றுவந்தாள். இவர்கள் வேலைசெய்த நிலங்களின் உரியமையாளர் ஓர் ராவுத்தர்.

மிகவும் முரடனான அந்த ராவுத்தர் குடிமயக்கத்தில் இளம் பெண்களை வேட்டையாடும் கொடூரன்.

ஒருநாள் என்னை வயலில் பார்த்தவன் தவறான எண்ணம்கொண்டான். பலமுறை அவனது பார்வையில் விழாமல் தப்பித்தாலும் வீடுவரை நீண்டது அவனது சீண்டல்கள். எனது தெய்வதன்மையை கூட உணராமல் அதிக தொந்தரவு தந்ததால் எனது அண்ணனான அரங்கநாதனை நினைத்து பூஜித்தேன். அவரும் ஒண்டிக்கருப்பாக அவதரித்து இரட்டை மலையிலிருந்து வந்திறங்கி செங்குளத்தான் என்ற பெயரில் எங்கள் வீட்டில் மறைந்திருந்தார். அந்த கொடிய இரவில் தள்ளாடி வந்த ராவுத்தன் எங்கள் வீட்டிற்க்குள் தன் தலயை நீட்டினான் . அண்ணன் செங்குளத்தான் கருப்பண்ணசாமி விஸ்வரூபம் கொண்டு தனது அரிவாளால் ராவுத்தரின் தலையை துண்டாக்கினார். அவன் உடலில்லிருந்து பீரிட்ட ரத்தம் செங்குளத்தில் விழுந்து சிகப்பாக மாற்றியது. பௌர்ணமி நிலவின் பிம்பம் செங்குளத்தில் விழுந்து அதுவும் சிகப்பாக காட்சியளித்தது.

ஓங்கி வளர்ந்த வன்னிமரம் தனது இலைகளை உதிர்த்து ராவுத்தரின் உடலை மண்ணுக்குள் புதைத்தது. அந்த ராவுத்தன் அடங்காபசி பிணியால் மாண்டவன். ஆதலால் எங்களுக்கு படையலிடும்முன் அவனுக்கு உதிரத்தால் எறிசோறிட்டு பின்புஎனக்கு சைவமாகவும், அண்ணனுக்கு ஆட்டுக்குட்டியின் உதிரத்யையும் படையல் வைத்தால் படைத்தவரின் வீட்டில் துர்மரணங்கள் ஏற்படாமல் காத்து, விவசாயம் செழிக்கவும், வியாபாரம் பெருகவும் குடும்பம் தழைக்கவும் , அருள்பாலித்து உடனிருந்து காக்கவும் வாக்களித்தேன் என தனது வரலாற்றை பூசாரி மூலம் உலகிற்கு அறிவித்தார். அதன்படியே ராவுத்தரால் ஊருக்கு இடையூரு ஏற்ப்படாதிருக்க காப்புக்கட்டும் நாளில் பச்சை உதிரம் கலந்த வேட்டைச்சாறு இன்றளவும் வீசப்படும்.

ராவுத்தரின் சமாதியருகில் மேல்நோக்கி வீசப்படும் எறிசோறு ராக்கெட் வேகத்தில் விண்ணை நோக்கி பாயும் அதிசயம் இன்றும் நடைபெறுகின்றது. காப்புக்கட்டைத் தொடர்ந்து பதினைந்து நாளில் மறுகாப்பும், மறுநாள் செவ்வாய்க்கிழமை காளிஓட்டமும் நிகழும். மறுநாள் புதன் கிழமை சுத்தபூசையாகும்.

வியாழன் கிழமைதான் இந்த திருவிழாவின் முத்தாய்ப்பான ஒன்றாகும். இத்திருவிழாவில் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழாவானது மிக பிரபலமாக கொண்டாடப்படுகிறது. ஆட்டின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடிக்கும் நிகழ்ச்சிதான் குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியாகும். மருளாளியின் தோளில் கிளிரூபத்தில் அமர்ந்து செங்குளத்தானே அந்த இரத்தத்தை குடிப்பதாக ஐதீகம்.

இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு ஒன்றுகூடுகிறார்கள். குட்டிக்குடித்தல் திருவிழா அன்று, முதலில் தேரிலிருக்கும் ஓலை பிடாரியாக வீற்றிருக்கும் குழுந்தலாயிக்கு பூஜை நடைபெறும். பின்னர் முதலில் வெட்டப்படும் ஆட்டின் ரத்தத்தை தேர்காலில்லிட்டு தேரை வடக்கு நோக்கி நிலைநிறுத்துவர், பின்பு முதல் குட்டியாக அரசு சார்பில் சர்க்கார் குட்டி தரப்படும். மருளாளி ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சிக்குடிப்பார். அவரின் தோளில் குழுந்தலாயி அம்மனின் மாலையில் இருக்கும் இருகிளிகள் தான் இரத்தத்தை குடிக்கின்றன என்பது இந்த ஊராரின் பாரம்பரிய நம்பிக்கை. அதன்பின்னர் பட்டரைகாரர்கள் அடுத்து ஊராரின் குட்டிகளை குடிப்பார். இப்படி சர்கார் குட்டி குடிக்கும் வழக்கம் உருவான வரலாறு சுவாரஸ்யமான ஒன்றாகும்.

குழுந்தலாயிக்கு 7 ஊர்களில் திருவிழா நடக்கும். பணம் பெருத்த குழுமாயிக்கு 3 ஊர்களிலும், ஜனம் பெருத்த குழுந்தலாயிக்கு 7 ஊர்களிலும் திருவிழா என்பது உள்ளூர் சொலவடை.

அத்தகைய திருவிழாக்களில் ஒன்றான மட்டைக்காரத்தெருவில் அன்னை நிகழ்த்திய அதிசயத்தை பார்ப்போம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் மட்டைக்காரத்தெருவில் மருளாளி குட்டிக்குடிக்கும் நிகழ்வினை அருகிலுள்ள ஜெயில் கோபுரத்திலிருந்து வெள்யளக்கார அதிகாரி தொலைநோக்கியின் மூலம் திருவிழாவை கண்காணித்தார். அப்போது மருளாளியின் தோளில் அமர்ந்து ஆட்டின் உதிரத்தை குடிக்கும் கிளியைபார்த்து அதிர்ந்தார்.

வெறும் கண்களால் மருளாளி குடிப்பதையும், தொலைநோக்கியின் மூலம் காணும் போழுது கிளி குடிப்பதையும் கண்டவர் சற்று நேரத்தில் கண்களின் பார்வையை இழந்தார். குழுந்தலாயியின் சக்தியை உணர்ந்தவர் மருளாளியிடமும், அன்னையிடமும் மனமுறுகி வேண்டி மீண்டும் பார்யவயை வழங்கினார். அந்த பிரிட்டிஷ் அதிகாரி நன்றிப்பெருக்கில் இனி வரும் காலங்களில் குழுந்தலாயிக்கு முதல் குட்டியாக சர்க்கார் குட்டி என்ற பெயரில் வழங்க ஆணையிட்டார். இன்றளவும் சர்கார் குட்டி தந்தபிறகே பட்டையரகாரர்களின் குட்டிகள் வெட்டப்படுகின்றன. கரிகாலச்சோழனின் இளம்வயதில் அவனைக்கொல்ல நடந்த சதியில் அரண்மனை தீயிட்டுக்கொளுத்தப்பட்டது. அந்த சதியிலிருந்து கரிகாலனை மீட்டு காக்கும் பணியில் உயிரை விட்ட சாம்பவன் என்னும் ஆபத்துதவிக்கு ( அன்றை சோழ ராஜ்ஜியத்தில் மெய்காப்பாளன் பதவியின் பெயர் ஆபத்துதவி) எல்லை கோவில்களில் காவலனாக சிலைவத்து வழிபாடு செய்யப்பட்டது. இன்றும் குழுந்தலாயி கோவிக் அரசமரத்தடியில் சாம்பவமூர்த்தியின் சிலையை காணலாம்.

ஒரே குடும்பத்தினர் தான் மருளாளியாக இருக்க வேண்டும் என்ற மரபு கியையாது. யார் வேண்டுமானாலும் மருளாளி ஆகலாம் . எனினும் இதுவரை தேர்வான மருளாளிகள் வைக்கோல்காரத்தெரு படையாட்சி இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது குறிப்பிடதக்கது.

இக்கோவிலை பொருத்தவரையில் திருவிழா காலத்தில்தான் புதிய மருளாளி தேர்ந்தெடுக்கப்படுவார். மருளாளியின் தொப்பி , இடைமணி ரத்தத்தை பிடிக்கும் வெள்ளி கிண்ணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் ஓர் இடத்தில் மறைத்து வைப்பார்கள். பிறகு அருள் வந்தவர் அந்த பொருட்கள் எங்கே இருக்கிறது என்று குறியெடுக்கவேண்டும். அப்படி யார் அருள் வந்து கண்டுபிடிக்கிறாறோ அவர் தான் மருளாளியாக தேர்வுசெய்யப்படுவார். இதோடு முடியாது அடுத்த கட்ட தேர்வும் நடக்கும், பெரிய அரிவாள் ஒன்றை வைத்திருப்பார்கள் மிகவும் கூர்யமயாக

3 1/2 அடி நீளம் கொண்ட அந்த 

அரிவாளின் கூரிய முனை மேல்நோக்கி இருக்கும்படிவைத்து அதன் இருபுறமும் ஆட்கள் பிடித்துக்கொள்வார்கள். மருளாளியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அந்த கூர்யமயான அரிவாள் மீது ஏறி அருள் வாக்கு சொல்லவேண்டும். இப்படி வருபவர்தான் மருளாளியாக கொண்டாடப்படுவார். மருளாளி செங்குளத்தான் கருப்பரின் ரூபமாக வணங்கப்படுவதால் இவருக்கு இளநீர் படைத்து விபூதி பூசிக்கொள்வது விஷேசமாக கருதப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்னையின் ஆக்ரோஷத்தை குறைக்க நான்காம் நாள் மஞ்சள் நீராட்டம் நிகழ்த்தி அடுத்த நாள் கோவிலுக்கு மீண்டும் குடிபோவார். இப்படியாக குழுந்தலாயி அம்மனின் வரலாறு சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. தொகுப்பு : பெரியமாரியம்மன் சேவா சங்க நண்பர்கள். குழுந்தலாயி வரலாறு (பேச்சு) 16:28, 14 பெப்ரவரி 2023 (UTC)