பயனர் பேச்சு:சு.இந்துமதி/மணல்தொட்டி

"வேதாரண்யம்" நகரம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது,வேதாரண்யம் என்று பெயர்வரக் காரணம் இவ்வூரில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலாகும், முன்பு இவ்வூர் "'திருமறைக்காடு"' என்று அழைக்கப்பட்டு வந்தது, 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர் தன் நூலான தேவாரத்தில் இவ்வூரை "' திருமறைக்காடு"' என்றே அழைக்கிறார், மறை என்றால் வேதம் என்று பொருள்..திருமறைக்காடு என்றால் வேதங்கள் நிறைந்த இடம் என்று பொருள்.அதுமட்டுமல்லாமல் விஷ்ணு வின் 7வது அவதாரமாகிய ராமர் , சீதைக்காக இராவனணுடன் போரிடும்போது, இவ்வூரில் இருந்துகொண்டு சீதையை பார்த்ததாக கூறப்படுகிறது, அவர் காலடி வைத்த இடம் "இராமர் பாதம்" என்று புகழப்பட்டு ஆலயமாக வைத்து வணங்கப்படுகிறது..அப்பரும், திருஞானசம்பந்தரும் வேதாரண்யம் வந்திருந்த பொழுது பூட்டியிருந்த கதவை , அப்பர், திருஞானசம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பாடி திறந்ததாக கூறப்படுகிறது, வேதாரண்யம் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தது,( https//wikipedia.org)

Return to the user page of "சு.இந்துமதி/மணல்தொட்டி".