Dr. P.M. அஜ்மல்கான்

தமிழக முஸ்லீம்களைக் காக்க கள்ளிக்கோட்டை ஜாமரின் அரசரின் கடற்படைத் தலைவரான குஞ்சாலி மரைக்காயர் முன் வந்தார். மாயதுன்னே என்னும் இலங்கை இளவரசர் ஒருவரும் சேர்ந்து கொண்டார். அதையெல்லம் விட முக்கியமான நிகழ்ச்சி ஒன்று உண்டு.

அதுதான் நாகூர் பாதுஷா நாயகம் சுல்தான் செய்யிது அப்துல் காதிறு ஷாஹூல் ஹமீது வலியுல்லா அவர்கள் தங்களது துணைவர்களான 404 ·பகீர்களுடன் சேர்ந்து குஞ்சாலி மரைக்காயருடனும் இதர தமிழகக் கரையோர மரைக்காயர்களுடனும் போர்த்துக்கீசியக் கொள்ளையருக்கு எதிராகப் போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது ஆகும். அவர்களோடு அப்போது சேர்ந்திருந்தவர்களில் காயல்பட்டினம் ஷெய்கு சதக்கு மரைக்காயர் அவர்களும் ஒருவர் ஆவார்கள். பாதுஷா நாயகம் அவர்களுடைய வரலாற்று நூல்களில் ‘ஆண்டகை அவர்களின் சத்துருக்களான குடகு தேசத்து அரசனின் படையினர்’ ஆண்டகையவர்களைத் தாக்க வந்ததும் அவர்களில் பெரும்பாலோர் அழிந்து பட்டதும் கூறப்படுகிறது. போர்த்துக்கீசியர்களின் இந்தியத் தலை நகரான கோவா ,குடகு தேசப் பகுதியே என்பதும் பாதுஷா நாயகம் அவர்களின் காலத்தில் அப்பகுதி போர்துக்கீசியர்களின் வசமே இருந்தது என்பதும் இச்செய்தியை உறுதிப் படுத்துவதாகும். அவ்வாறு நடந்த போர் ஒன்றிலே மானுவேல் டிசூஸா என்னும் போர்துக்கீசியக் கடர்படைத் தலைவன் , பாதுஷா நாயகம் அவர்களின் வழிகாட்டலில் நின்று போரிட்ட முஸ்லீம் வீரர்களால் கொல்லப்பட்டான் என்று தெரிகிறது. நாகையில் வீற்று இன்றும் நல்லருள் புரிந்து கொண்டிருக்கும் வலி நாயகர் அவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கான போரிலும் பங்கு கொண்டு வெற்றி கொண்டார்கள் எனும் செய்தி எண்ணியெண்ணி போற்றத் தக்கதாகும்.

வரிசையாக நான்கு குஞ்சாலி மரைக்காயர்கள் கடற்படைத் தலைவர்களாக விளங்கினர். அவர்களின் நினைவை நிலை நாட்டும் வகையில், சுதந்திரப் போராட்டத்தில் அவர்களின் பெரும் பங்கை நினைவு கூறும் வகையில் இந்திய அரசாங்கம் தனது கடற்படைத் தளம் ஒன்றிற்கு ‘குஞ்சாலி மரைக்கார்’ என்று பெயர் சூட்டியுள்ளது இங்கு நன்றியுடன் குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் குடும்பத்தில் பலருக்கும் குஞ்சாலி மரைக்காயர் என்ற பெயர் விளங்கி வந்தது. கடற்படைத் தலைவர் குஞ்சாலி மரைக்காயரோடு நாகூர் நாயகம் அவர்களுக்கு ஏற்பட்ட தோழமையின் விளைவாக அக்குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு குஞ்சாலி மரைக்காயர் ,வலியுல்லா அவர்களின் கூடவே நாகூருக்கு வந்து விட்டார். அவர் வாழ்ந்த தெருவே தர்காவின் அருகே இன்றும் உள்ள ‘குஞ்சாலி மரைக்காயர்’ தெரு ஆகும்.


குஞ்சாலி மரைக்காயருக்கும் போர்த்துக்கீசியருக்கும் இடையே நடைபெற்ற கடற் போர்கள் பல. அவற்றுள் சில போர்கள் கீழக்கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைந்துள்ள வேதாளை கடற்கரையில் நடந்தவையே. அவ்வாறு நடந்த ஒரு கடற்போரில் குஞ்சாலி மரைக்காயருக்குத் தோல்வி ஏற்படவே அவரை ஜாமரின் அரசர் கள்ளிக்கோட்டைக்குத் திரும்ப அழைத்துக் கொண்டார். வேதாளையில் இன்றுமந்த ஷஹிதாக்களீன் (வீரத் தியாகிகளின்) சமாதிகள் பல நூற்றுக் கணக்கில் காணப்படுகின்றன. மீஜான் கற்கள் மணலில் புதையுண்டு கிடக்கின்றன. ஆய்வாளருக்கு. சிறப்பாக புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு நல்ல செய்திகள் கிடைக்கக்கூடிய இடம் அது. அத்தகையோரின் கவனத்தை அது இதுவரை கவர்ந்ததாகத் தெரியவில்லை… ……. ……… ………. முன்பு சொன்னபடி தமிழகத்தில் கேரளத்துக் குஞ்சாலி மரைக்காயரும் பாதுஷா நாயகம் ஷாஹுல் ஹமீது வலியுல்லா அவர்களும், காயல் பட்டினம் ஷெய்கு ஸதக்கு மரைக்காயர் அவர்களும் போர்த்துக்கீசியர்களுக்கு அவ்வளவு பலத்த அடி கொடுத்திருக்கவில்லை யென்றால் தென் தமிழகமும் மற்றொரு ‘கோவா’ ஆகி இருக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழகத்தின் ஆபத்தான நிலைமையை உணர்ந்த பாதுஷா நாயகமவர்களின் குரு நாதரான முஹம்மது கெளது குவாலியர் (வலி) அவர்கள் , தம் சீடரான ஷாஹூல் ஹமீது (வலி) அவர்களைத் தமிழகத்திலேயே தங்கி இஸ்லாமியப் பணி புரியப் பணித்தார்கள். அவர்கள் ஆன்மீகத்தைப் பரப்பும் பணியோடு தம் சேவையை நிறுத்திக் கொள்ளாமல் தம்மைச் சுற்றியுள்ள பரங்கிப் பகைவர்களின் தொல்லைகளிலிருந்து மக்களை விடுவிப்பதையும், தம்முடைய கடமையாக உணர்ந்தார்கள். எனவே அன்னிய ஆதிக்கத்தைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் எச்சரித்தார்கள். குஞ்சாலி மரைக்காயர் போன்ற படை வீரர்கள் மத்தியில் வீரத்தை ஊட்டி உபதேசித்தார்கள். மட்டுமின்றி சேதுபதி அரசர், தஞ்சை அரசர், அப்போதைய இலங்கை மன்னர் ஆகியோரிடம் சென்றும் அன்னிய ஆட்சியால் விளையும் தீமைகளை விளக்கி அவர்களை பரங்கியரோடு பொருதச் செய்தனர்.

சத்யமார்க்கம் வலைத்தளத்திலிருந்து :

‘இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - 2 ‘

இந்திய சுதந்திரப் போராட்டங்களில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்தின் அளவு மற்றவர்கள் வியர்வை கூட சிந்தியிருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களுக்குள் சற்று ஆழமாகச் கால்பதிப்போம்.

வாஸ்கோடகாமா

கி.பி 1492ல் ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி வீழ்த்தப்படுகிறது.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூறி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள்.

வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

குஞ்சாலி மரைக்காயர்

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில் கடற்படையைக் குறித்து எவ்வித அறிவோ திட்டங்களோ சாமுத்ரி ராஜா உட்பட பெரும்பாலான இந்திய அரசர்களுக்கு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1521ல் ஹென்றி டிமெனபெஸ் – லோப்வாஸ்-டி-சம்பாயோ ஆகியோர் அடங்கிய பரங்கிய கடற்படை, கோழிக்கோட்டு அரசன் சாமுத்ரியின் கடற்படைத்தளமான பொன்னானி மீது ஆக்ரமிப்பைத் தொடுத்தது.

இதையடுத்து அஹ்மது மரைக்காயர், அவரது தம்பி குஞசாலி மரைக்காயர், இவர்களது மாமா முஹம்மது அலி மரைக்காயர் ஆகியோர் கொச்சியிலிருந்து கோழிக்கோடு சென்று தங்கினார்கள்.

கி.பி. 1523ல் குஞ்சாலி மரைக்காயர் பரங்கியருக்கெதிராகப் போர் செய்ய 200 பெரிய கப்பல்களைத் தயாராக வைத்திருந்தார். கி.பி. 1542ல் பரங்கியருக்கும், குஞ்சாலி மரைக்காயர் படைக்கும் உக்கிரமானபோர் நடைபெற்றது. இப்போரில் குட்டி அலி பரங்கியரை கலங்கடித்து அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

கி.பி. 1528ல் பர்கூரில் குட்டி அலியின் படைகளும் போர்த்துக்கீசியப் படைகளும் கடுமையாக மோதிக் கொண்டன. மங்கலாபுரத்துக்கும் மவுண்ட் அலிக்கும் இடையில் நடைபெற்ற போரில் சின்னகுட்டி அலி போர்த்துக்கீசியரால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

முதல் வெற்றி

கி.பி. 1528ல் செத்வாய் என்னுமிடத்தில் போர்த்துக்கீசியர் பல கப்பல்கள் நிறைய இந்திய வளங்களை ஏற்றிக் கொண்டு பலத்த பாதுகாப்புடன் தங்கள் தாய் நாட்டிற்குக் கொண்டு செல்ல முயன்றபோது குஞ்சாலி மரைக்காயர் அக்கப்பல்களைத் தாக்கி, ஒரு வெள்ளையரையும் விடாமல் கொன்று குவித்து மாபெரும் முதல் வெற்றியைப் பெற்றார்.

கி.பி. 1531ல் பரங்கியரை கடற்போரில் கதிகலங்கச்செய்த அஹ்மது மரைக்காயர் வீரமரணத்தினைத் தழுவிக் கொண்டார்.

கி.பி. 1535ல் அட்மிரல் சுலைமான் பாட்ஷா, சமுத்ரியின் படையுடன் சென்று பரங்கியரை வென்று அவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றினார்.

கி.பி. 1537ல் நாநோடி குன்ஹா என்பவர், கவர்னர் பதவிக்கு வந்த போது தியோ-கோ-தே-எஸல்வேலி யாவின் தலைமையில் கோழிக்கோடு கடற்கரையை முற்றுகையிடவும் போப்பூர் நதிக்கரையில் உள்ள சாலியன் என்ற இடத்தில் கோட்டையைக் கட்டவும் முயன்றபோது குஞ்சாலி மரைக்கார் சாலியன் கோட்டையைத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டின கடற்கரையிலும் போர் நடைபெற்றது. அங்கு 51 சிறப்புக் கப்பல்களில் 8000 வீரர்களுடன் குஞ்சாலி மரைக்காயர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1538ல் தூத்துக்குடி கடற்கரையில் போர்த்துக்கீசியருக்கும், குஞ்சாலி மரைக்காயருக்கும் உக்கிரமான போர்கள் நடைபெற்றன. போர்த்துக்கீசிய படையை இங்கு குஞ்சாலி மரைக்காயர் தோற்கடித்தார். இவ்வாறாக அந்நியருக்கெதிராக கற்பனைகளை மிஞ்சிய பெரும் சாதனை புரிந்த மாவீரன் குஞ்சாலி மரைக்காயர் கொழும்பில் எதிரிகளின் குண்டுக்கு இரையாகி நாட்டுக்காக தன்னுயிர் ஈத்து வீரமரணம் எய்தினார்.

இவரை அடுத்து அவரது குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். 1570ல் போப்பூர் நதிக்கரையின் சாலியன் கோட்டை போரில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் வெற்றி பெற்று, சுமார் 65 வருடங்களாக நடைபெற்று வந்த அந்நியரின் கடலாதிக்கத்தை முறியடித்தார்.

இவருக்குப் பின் மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் தலைமைப் பொறுப்பேற்றார். 1572ல் பரங்கியர்படை மஸ்ஜிதுகளையும் கோயில்களையும் கொள்ளையிட்டு, கோழிக்கோடு, திருக்கொடி, கப்பக்காடு, பொன்னானி துறைமுகங்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இவர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மூன்றாம் குஞ்சாலி மரைக்காயர் 1586ல் அந்நியர் படையை வெற்றி கொண்டார்.

1589ல் இவரது மருமகன் குவாஜிமூஸா மரைக்காயர் மற்றோரிடத்தில் பரங்கியரைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாமுத்ரி ராஜாவின் துரோகம், குஞ்சாலி மரைக்காயரின் மறைவு!

1595 -ல் நான்காம் குஞ்சாலி மரைக்காயரும் பரங்கியரை எதிர்த்து வந்தார். ஆனால் அப்போதைய கோழிக்கோடு அரசன், வாஸ்கோடகாமாவின் பேரனான பிரான்ஸிஸ்கோ-டி-காமாவுடன் இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டான். இப்பாதகனின் கீழறுப்பு வேலைகளை சற்றும் அறியாமல் மனத்தூய்மையோடு நாட்டிற்காக போராடி வந்த குஞ்சாலி மரைக்காயர் சமுத்ரி அரசனைச் சந்திக்க வந்தபோது அவரைப் பிடித்து பரங்கியரிடம் ஒப்படைத்து விட்டான். இதனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ஊண், உறக்கம் இன்றி கொடுமைப்படுத்தப்பட்டு, இறுதியில் தேசவிரோதி சாமுத்ரி ராஜாவின் கூட்டுச்சதியால் நான்காம் குஞ்சாலி மரைக்காயர் கொடுமையாகக் கொல்லப்பட்டார்.

ஹாஜி பக்கீர் முஹம்மது சேட் என்ற முஸ்லிமால் வழங்கப்பெற்ற (அப்போதைய) இரண்டு இலட்சம் ரூபாயின் மூலம் வாங்கப்பட்ட சுதேசிக்கப்பலின் மாலுமியான வ.உ.சி.க்கு வரலாற்றுப்பாடப்புத்தகத்தில் தனி இடம் ஒதுக்கிய இந்திய அரசு இருநூறுக்கும் அதிகமான சிறப்புப் போர் கப்பல்களைக் கொண்ட மாபெரும் கடற்படையை உருவாக்கி நூறு ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்துப் போராடி வீரமரணம் அடைந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைப் பற்றி ஒருவரி கூட பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்யாதது நாட்டின் விடுதலைக்காக போரிட்ட வீரத்தியாகிகளை அவமதிப்பதாகாதா?

ஒரு முஸ்லிம் வாங்கிக் கொடுத்தக் கப்பலின் மாலுமியாக இருந்த வ.உ. சிதம்பரனாருக்கு வரலாற்றில், “கப்பலோட்டிய தமிழன்” பட்டம். இந்தியச் சுதந்திரப்போருக்கு முன்னோடியாக ஒரு நூற்றாண்டுகாலம் பரங்கியர்களை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட இந்தியப் போர் கப்பல்களை உருவாக்கி எதிர்த்து மடிந்த குஞ்சாலி மரைக்காயர் குடும்பத்தைக் குறித்து ஒரு வரி கூட வலாற்றில் இல்லை. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்த மிகப்பெரும் அநீதியாகும் இது.

from http://www.keralawindow.net/imp_k.htm

KUNHALI MARAKKAR

Marakkar means navigator. In Tamil the ship is known as Marakkala. It is believed that the word Marakkar was derived from this word. Kunhali is the honorific title awarded to the Marakkar family by the Zamorin. Kunhali Marakkars were the admirals of Zamorins naval force. They were great patriots who fought for their motherland till their last breath. It was the stubborn resistance of Marakkars that compelled the Portuguese to shift their establishments to Kochi and to Goa. Kozhikode was one of the famous trade centres of oriental region and Arabs maintained monopoly over the trade with Kozhikode. The attempts of Portuguese to win over the Arabs did not fructified as the Zamorin was in favour of the latter. This led to confrontation between the Portuguese and Arabs. The first Kunhali Marakkar was a victim of the atrocities of Portuguese and suffered heavy loss. He concluded a treaty with the Zamorin and fought against the Portuguese. Zamorin pleased and appointed him as the admiral of naval force and conferred honorific title Kunjali. Kunhali Marakkar I, Kunhali Marakkar II, Kumhali Marakkar III alias Pada Marakkar, Kunhali Marakkar IV alias Muhammed Kunhali Marakkar were the great valors and masters of maritime warfare. In the battle held during 1599, Kunhali Marakkar was defeated and caught as a prisoner. Later he was sentenced to death.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:BaitunNur&oldid=405297" இலிருந்து மீள்விக்கப்பட்டது