பழமையா..............புதுமையா................?

இன்றைய சமுதாயம் அன்றாடம் பல்வேறு புதிய புதிய நோய்களை எதிர் நோக்கி கொண்டு உள்ளது.

    ஒவ்வொரு சராசரி மனிதனிடமும் பேச்சு கொடுத்தால், ஓவ்வொருவரும் ஏதாவது ஒரு நோயை சுமந்த வண்ணமாக உள்ளார்கள். பிறக்கும் பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். நோயின்றி வாழ்க்கை இல்லை என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்கின்ற அச்சத்திற்கு மனிதர்களின் நிலை போய் கொண்டு உள்ளது. 

இதற்கு யார் காரணம்?

நமக்கு நாமே வினை விதைக்கிறோமா?

இப்படி பல கேள்விகள்.

நம்மை நாமே ஏன் சற்று பின்னோக்கி பார்க்க கூடாது?

இதோ.........

மண் பாண்டகளில் உணவு சமைத்து சாப்பிட்டு வந்த நாம், அலுமினிய பாத்திரத்தையும், சில்வர் பாத்திரத்தையும் நாடியது மிக பெரிய தவறு.

பழைய உணவுகளை அடுப்பில் மட்டும் சூடு படுத்தி சாப்பிட்ட நாம், இன்று ஓவனின் உதவியை நாடுவது.

உணவுகளை குளிர் சாதனா பெட்டியில் வைத்து நீண்ட நாட்களுக்கு உண்பது.

வீட்டில் உணவு தயாரிக்க அலுப்பு பட்டு ,பாஸ்ட் புட் வாங்கி சாப்பிடுவது.

வீட்டின் அருகிலேயே சுத்தமான கறி வகைகள் கிடைக்கும் பொழுது, அதை வாங்கி உபயோகிக்காமல் பதப்படுத்தப்பட்ட கறி வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அலுப்பு பட்டு, பிள்ளைகளை காண்வென்டில் சேர்ப்பது, அதை மற்றவர்களிடம் தன் பிள்ளை காண்வென்டில் படிப்பதாக பெருமைப்பட்டு கொள்வது.

நமது விளை நிலங்களுக்கு , அந்நிய நாட்டு உரங்களை பயன்படுத்தியது.

சிறிய நோய்களுக்கும், நாட்டு மருந்துகளை நாடாமல், முழுக்க முழுக்க ஆங்கில மருந்துகளை நாடியது.

சிறிய தலைவலிக்கு கூட மருந்தை உபயோகிப்பது .

சிறிய சிறிய வேலைகளை கூட செய்யாமல், அதற்கு வேலை ஆட்களை நியமிப்பது.

வெளியில் செல்லும் பொழுது, அருகில் உள்ள இடத்திற்கு கூட நடக்க அலுப்பு பட்டு, வாகனத்தின் உதவியை நாடுவது.

கீழ் வீட்டில் இருந்து கொண்டு , மேல் வீட்டில் உள்ளவர்களை அழைக்க கைபேசியை பயன்படுத்துவது. கைபேசியில் அதிக நேரம் பேசுவதை பெருமையாக நினைப்பது.

நம்முடைய அதிக நேரத்தை தொலைகாட்சியிலும் , கணினியிலும் பயன்படுத்துவது.

கர்ப்பம் தரித்தவுடன் சிறிய வேலைகள் கூட செய்யாமல், நடையை குறைத்து கொள்ளுதல். (இது பெண்களுக்கு சுக பிரசவம் ஏற்படாமல் தடுக்கின்றது. )

பிறந்தவுடன் தாய் பால் குடித்து வளர்ந்த நாம், நம் குழந்தைகளுக்கு புட்டி பாலை கொடுத்து வளர்க்க ஆரம்பித்து விட்டோம். இது நம் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு.

நம்மில் சிலர் ,எந்த நேரமும் வேலை வேலை என்று வீடுகளில் பெண்களும், அலுவலகத்தில் ஆண்களும் தன் எனர்ஜி தன்னை விட்டு செல்லும் வண்ணம் தன்னை தானே மறந்து உழைப்பது .

கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் சம்மந்தமான பிரச்சினைகளை, அன்றாடம் அதற்கான நேரம் ஒதுக்கி அமர்ந்து பேசி தீர்க்க முயலாமல் இருப்பது.

நம்முடைய மன கஷ்டத்தை தனக்கு தானே, மனதில் வைத்து கொண்டு வெளியில் சொல்லாமல் இருப்பது.

பருவம் அடைந்த பிள்ளைகளின் மீது, தனி கவனம் செலுத்தாமல் இருப்பது.

பிள்ளைகளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து வளர்ப்பது.

இப்படியாக சொல்லி கொண்டே போகலாம்.

நோய் அற்ற வாழ்க்கை நம் அனைவருக்கும் வேண்டும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

நம்மால் பழைய நிலைக்கு ஏன் திரும்ப முடியாது.

முடியாது என்பது, நமக்கு நாமே சொல்லி கொள்வது. முடியும் என்பது, நமக்கு நாமே வகுத்து கொள்வது.

வெற்றி என்பது பெற்று கொள்வது தோல்வி என்பது கற்று கொள்வது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Ilamthooyavan&oldid=702498" இலிருந்து மீள்விக்கப்பட்டது