பயனிலை
தமிழ் இலக்கணப்படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல்லின் வினை முற்று நிலை பயனிலை எனப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.