பரமத்தி-வேலூர் வட்டம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு தாலுக்கா

பரமத்தி-வேலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக பரமத்தி-வேலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 60 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

இவ்வட்டத்தில் பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 213,091 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 106,576 ஆண்களும், 106,515 பெண்களும் உள்ளனர். 61,468 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட 66.2% மக்களில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 17489 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 912 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 38,500 மற்றும் 142 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 98.04% , இசுலாமியர்கள் 1.3%, கிறித்தவர்கள் 0.47%% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமத்தி-வேலூர்_வட்டம்&oldid=3393132" இலிருந்து மீள்விக்கப்பட்டது