வருவாய் வட்டம்
வருவாய் வட்டம் அல்லது தாலுகா என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வருவாய் வட்டம் (REVENUE TALUK) வட்ட அலுவலகம் (TALUK OFFICE) அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியரின் மேற்பார்வையில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.
பணிகள்தொகு
- வருவாய் வட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் கோரும் சான்றிதழ்கள், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி வட்டாட்சியர் வழங்குகிறார்.
- வருவாய் வட்டத்தில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்கவும், அமைதிப்படுத்தவும் வேண்டும்.
- நில உடைமையாளர்களுக்கு உரிய பட்டா, சிட்டா, அடங்கல், நில ஆவணங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் இவ்வலுவலகம் மூலமாக வழங்கப்படுகிறது.
- மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் கோட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
- தங்கள் வருவாய் வட்டப் பகுதியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உதவிட வேண்டும்.
- ஆண்டிற்கு ஒரு ஜமாபந்தி நடத்தி வருவாய் கிராமங்களின் நில வரி வசூல் கணக்கு மற்றும் நன்செய்/ புன்செய் / புறம்போக்கு நிலம் / பஞ்சமி நிலம் அளவுகள் கணக்கிட வேண்டும்.
- பேரிடரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க வகை செய்ய வேண்டும்
இதையும் பார்க்கதொகு
- வருவாய் கிராமம்
- குறுவட்டம் (பிர்கா)
- வருவாய் வட்டம் (தாலுக்கா)
- வருவாய் கோட்டம்
- மாவட்டம்