பர்த்தலமேயு (திருத்தூதர்)
யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் இவர் நத்தனியேல் என அழைக்கப்படுகிறார். அந்நற்செய்தியில் நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, 'இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்' என்று இவரைக் குறித்துக் கூறினார்[1]. மேலும் மத்தேயு மாற்கு லூக்கா நற்செய்திகளில் திருத்தூதர்கள் பட்டியலில் இவர் இடம் பெறுகிறார். திருத்தூதர் பணிகள் நூலில் இயேசுவின் விண்ணேற்பைக் கண்டவர்களுள் இவரும் ஒருவர்.[2]
![]() புனித பர்த்தலமேயுவும் (வலப்புறம்) புனித யோவானும் | |
திருத்தூதர், இரத்த சாட்சி | |
பிறப்பு | ~ கிபி 1 (முற்பகுதி) யூதேயா, கலிலேயா, உரோமைப் பேரரசு |
இறப்பு | ~ கிபி 1 (பிற்பகுதி) ஆர்மீனியாவில் தோல் உரிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார் |
ஏற்கும் சபை/சமயங்கள் | எல்லா கிறித்தவப் பிரிவுகளும் |
முக்கிய திருத்தலங்கள் | புனித பர்த்தலமேயு மடம், ஆர்மீனியா |
திருவிழா | ஆகஸ்டு 24 |
சித்தரிக்கப்படும் வகை | கத்தி, அவரது உரிக்கப்பட்ட தோல் |
பாதுகாவல் | இறைச்சி வெட்டுநர், நூற்கட்டுநர், மால்ட்டா, ஆர்மீனியா, நரம்பியல் நோய்கள், செருப்பு தைப்பவர் |

தூய ஆவியின் வருகைக்குப் பிறகு ஆர்மீனியா, இந்தியா[3] மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார் என்பது மரபுச் செய்தி. பாரம்பரியத்தின்படி இவர் ஆர்மீனியாவில் உயிரோடு தோல் உரிக்கப்பட்டு, தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். இவ்விடத்தில் இப்போது புனித பர்த்தலமேயு மடம் உள்ளது.
உசாத்துணை தொகு
- ↑ யோவான் 1:47
- ↑ திருத்தூதர் பணிகள் 1:4,12,13
- ↑ "Bartholomew, Saint". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press.