பழையார் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் ஆகும். இது சீர்காழியில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம் ஆகும். இவ்வூர் கொள்ளிடம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரிய மீன்பிடி துறைமுகம் இதுவாகும். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பல்வேறு வகை மீன்களும், இறால், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கு அலையாத்திக்காடுகள் காணப்படுகின்றது. 2004-ஆம் ஆண்டு சுனாமி பாதிப்புக்குள்ளான இக்கிராமம் பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது புது எழுச்சி பெற்றுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன, அவற்றில் சீனிவாசா சேவை அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக பல சேவைகளை புரிந்து வருகிறது.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறர்கள்.

இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் கொடியம்பாளையம் எனும் தீவு அமைந்துள்ளது. இங்கிருந்து படகின் மூலம் இத்தீவிற்கு செல்லலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழையார்&oldid=3511525" இலிருந்து மீள்விக்கப்பட்டது