பாஞ்சசன்யம்
'பாஞ்சசன்யம் அல்லது பாஞ்சன்னிபம் என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். [1] இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது.[2]ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும் அறியப்பெறுகிறது.

பாஞ்சஜன்யம் சப்தப்ரம்ம வடிவம்.[3]
பெயர்க்காரணம் தொகு
தமக்கு வில்வித்தை கற்றுத்தந்த 'சாந்தீபனி' முனிவரின் மகனை மீட்க கடலில் வாழ்ந்த 'பாஞ்சஜன்யன்' என்ற அசுரனை ஸ்ரீகிருஷ்ணர் கொன்றார். சாகும் தருவாயில் கிருஷ்ணரைப் பணிந்த அந்த அரக்கனின் வேண்டுகோளின்படி, அவனது சாம்பலைத் திரட்டி சங்காக மாற்றி அவனது பெயராலேயே ஏந்திக்கொண்டார் என்று பாகவத புராணம் கூறுகிறது.
இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக்கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. [4]
சிவபெருமான் தந்தமை தொகு
தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக பெறப்பட்டதாகவும், திருமாலுக்கு சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். [5]
காண்க தொகு
ஆதாரம் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://ammandharsanam.com/magazine/Deepawali2012unicode/page021.php.
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=26897&Print=1
- ↑ ஸ்ரீமந்நாராயணீயம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; பக்கம்
- ↑ http://cinema.maalaimalar.com/2012/12/26141552/vishnu-mahalakshmi-worship.html
- ↑ http://www.thiruthalam.com/temple_detail.php?id=181