பிரித்விஸ்வரா

இரண்டாம் பிரித்திவிஸ்வரன் (Prithviswara II) என்பவர் கிபி. 1186 முதல் 1207 வரை ஆட்சி செய்த வேலநாட்டி சோடர்களின் தெலுங்கு அரசர் ஆவார். இவரது மரபில் இவர் முக்கிய ஆட்சியாளராவார். இவர் பித்தபுரம் என்ற இடத்தில் இருந்து ஆட்சிசெய்தார். இழந்த தங்கள் பகுதிகளை மீட்க இவர் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டார். காக்கத்தியர், யாதவர்களுடன் போரிடுகையில் இவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சந்தோலு மற்றம் வேங்கி போன்ற இடங்களை உள்ளடக்கிய வேலநாட்டி பகுதியை மீட்டார். ஆனால் இவர் கிபி. 1201 முதல் 1207 வரை காகத்தியர்கள் மற்றும் நெல்லூர் சோடர்களிடம் தன் பகுதிகளை இழந்தார்.

வெலநாட்டு சோடர்கள்
வெலநாடு துர்ஜய தலைவர்கள்
முதலாம் கொங்க சோடர் 1076–1108
முதலாம் ராஜேந்திர சோடர் 1108–1132
இரண்டாம் கொங்க சோடர் 1132–1161
இரண்டாம் ராஜேந்திர சோடர் 1161–1181
மூன்றாம் கொங்க சோடர் 1181–1186
பிரித்திவிஸ்வர சோடர் 1186–1207
மூன்றாம் ராஜேந்திர சோடர் 1207–1216

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்விஸ்வரா&oldid=3057657" இலிருந்து மீள்விக்கப்பட்டது