பிள்ளை லோகஞ்சீயர்

பிள்ளை லோகஞ்சீயர் என்பவர் வைணவ வரலாறுகள் பலவற்றை எழுதியவர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மணிப்பிரவாள நடையில் கிரந்த எழுத்துக்களுடன் சில தமிழ் நூல்களும், வடமொழி நூல்களும் எழுதியவர்.

எழுதிய நூல்கள்
  1. இராமானுசார்ய திவ்ய சரிதை
  2. யதீந்திரப் பிரணவப் பிரபாவம் (மணவாள மாமுனிகள் வரலாறு)
  3. திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதி நூலுக்கு வியாக்கியானம்
  4. பிள்ளை லோகாசாரியார் எழுதிய உரைநடை நூல் ‘அர்த்த பஞ்சகம்’ என்பதற்கு வியாக்கியானம்.
  5. பிள்ளை லோகாசாரியர் மாணாக்கர் விளாஞ்சோலைப் பிள்ளை செய்த நூல் ‘சப்த காதை’ என்பதற்கு வியாக்கியானம்
  6. மணவாள மாமுனிகள் பாடிய நூல்களுக்கு வியாக்கியானம்
    1. உபதேச ரத்தின மாலை
    2. ஆர்த்திப் பிரபந்தம்
    3. திருவாய்மொழி நூற்றந்தாதி உரை
  7. ஸ்ரீ வைஷ்ணவ சமயாசார நிஷ்கர்ஷம் (தனி உரைநடை நூல்)
  8. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தனியன்கள் வியாக்கியானம்
  9. உபதேசத் திருநாமம்
  10. திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிள்ளை_லோகஞ்சீயர்&oldid=1491025" இலிருந்து மீள்விக்கப்பட்டது