புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு
புனித திரித்துவ தேவாலயம், ஏற்காடு இந்தியாவின் தமிழ்நாடு, ஏற்காட்டில் 1834-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1853-ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்திற்குப் பிறகு இந்தத் தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது. இது ஒரு சுதந்திர தேவாலயம் ஆகும். 10 வருடங்களாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கில், தரப்பட்ட இறுதித் தீர்ப்பு அதன் சுதந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Holy_Trinity_Church%2C_Yercaud%2C_India.jpg/220px-Holy_Trinity_Church%2C_Yercaud%2C_India.jpg)
"இந்திய வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் தந்தை" என்று கருதப்படும் பிரித்தானிய தொல்லியலாளரும் புவியியலாளருமான ராபர்ட் புரூஸ் ஃபுட்டின் (1834-1912) அடக்கமான இடமாகும். அவருடைய நினைவுச்சின்னத்தை இங்கு காணலாம். தேவாலயத்தில் பீட்டர் பெர்சிவல் (1803-1882) கல்லறை உள்ளது. அவர் ஒரு சமயப்பணியாளர், மொழியியலாளர் மற்றும் இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஒரு முன்னோடி கல்வியாளர் ஆவார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Subramanian, T (July 8, 2009). "The trail of two British innovators in India". தி இந்து இம் மூலத்தில் இருந்து ஜூலை 12, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090712071555/http://www.hindu.com/2009/07/08/stories/2009070855681100.htm. பார்த்த நாள்: January 2, 2013.