பீட்டர் பெர்சிவல்
கிறித்தவப் பாதிரியார். இந்தியா இலங்கையில் பணியாற்றியவர்
பீட்டர் பெர்சிவல் (Peter Percival, 1803 – சூலை 11, 1882) ஓர் பிரித்தானிய நற்செய்தி அறிவிப்பாளரும் மொழியியலாளரும் ஆவார். இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த காலத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த பாடுபட்டார். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தன் சேவையைத் தொடர்ந்தார். ஆங்கிலம்-தெலுங்கு மற்றும் ஆங்கிலம்-தமிழ் அகராதிகளும், ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழிகளையும் ஔவையாரின் பாடல்களையும் மொழிபெயர்த்தும் எழுதினார். தெலுங்கிலும், தமிழிலும் தினவர்த்தமணி என்ற இதழை வெளியிட்டார். இவர் சமற்கிருதத்தில் பட்டம் பெற்றவரும் ஆவார். 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள ஏற்காட்டில் இறந்தார்.
பீட்டர் பெர்சிவல் | |
---|---|
![]() | |
பிறப்பு | 1803 |
இறப்பு | சூலை 11, 1882 ஏற்காடு, இந்தியா |
பணி | கல்வியாளர், மொழியியலாளர், நற்செய்தி அறிவிப்பாளர் |