புறப்பொருள் வெண்பாமாலை உரை

புறப்பொருள் வெண்பாமாலை உரை என்பது புறப்பொருள் வெண்பாமாலை நூலுக்கு எழுதப்பட்ட உரை. புறப்பொருள் வெண்பாமாலை ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இதன் ஆசிரியர் ஐயனாரிதனார். இவரிடம் பயின்ற மாணவர் ஒருவர் இதற்கு உரை எழுதினார். புறப்பொருள் வெண்பாமாலையில் உள்ள பொருளிலக்கணம் கூறும் கொளு நூற்பாக்களும், அவற்றிற்குத் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுப் பாடல்களும் நூலாசிரியரால் எழுதப்பட்டவை. அவற்றிற்கு எழுப்பட்டுள்ள உரை நூலாசிரியரின் மாணாக்கரால் எழுதப்பட்டது.[1]

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 78.