பூட்டானில் போக்குவரத்து

பூட்டானில் போக்குவரத்து (Transport in Bhutan ) தோராயமாக 8000 கிலோமீட்டர் அல்லது 5000 மைல் நீளம் கொண்ட சாலைகள் மற்றும் நான்கு விமான நிலையங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் மூன்று விமான நிலையங்கள் செயல்படக்கூடிய வகையிலும் ஒன்றோடொன்று உள்ளிணைப்பாகவும் இணைக்கப்பட்டுள்ளது. பேரோ விமானநிலையம் மட்டுமே அனைத்துலக விமானச் சேவையை அளிக்கின்ற விமான நிலையமாகச் செயல்படுகிறது. உள்கட்டமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூட்டானின் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் 1960 ஆம் ஆண்டு முதல் வளர்ச்சியடைந்து வருகிறது.

2006 ஆம் ஆண்டில் பூட்டானில் சாலை அமைக்கும் பணி

நிலத்தால் சூழப்பட்டுள்ள பூட்டான் நாட்டில் துறைமுகங்கள் கிடையாது. தொடர்வண்டி போக்குவரத்து சேவை எதுவும் இல்லை. அதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டு வருகிறது.

போக்குவரத்து வரலாறு தொகு

 
திம்புவில் இருந்து புவண்ட்சோலிங் வரை செல்லும் பொதுத்துறை பேருந்து

சாலைவசதிகள் இல்லாத காரணத்தால் 1961 ஆம் ஆண்டுவரையிலும் பூட்டானில் பயணம் என்பது நடைப்பயணம் அல்லது கோவேறு கழுதையின் மீது அல்லது குதிரையின் மீது சவாரி செய்வதாகவே இருந்தது. இந்திய எல்லையில் இருந்து திம்பு வரையிலான 205 கிலோமீட்டர் நீளமுள்ள மலையேற்ற தூரத்தைக் கடக்க ஆறு நாட்கள் தேவைப்பட்டது. 1961 முதல் 1966 வரையிலான முதலாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் நவீன சாலைகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடங்கப்பட்டன. 175 கிலோமீட்டர் நீளமுள்ள முதலாவது சாலை 1962 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. புண்ட்சோலிங்கு முதல் திம்பு வரையில் அமைக்கப்பட்ட கிளைச்சாலையான இது பின்னர் பேரோ சாலையுடன் இணைக்கப்பட்டது. ஈப்பு வழித்தடம் என விவரிக்கப்படும் இச்சாலை, திம்பு மற்றும் புவண்ட்சோலிங்கை இணைத்து இந்நகரை மேற்கு வங்கத்தின் செய்கௌனுடன் இணைக்கிறது. இந்திய எல்லையில் இருந்து திம்பு வரையிலான பயண நேரம் ஆறு மணி நேரமாக குறைந்தது. இந்தியா மற்றும் நேபாளத்தில் இருந்து 30000 தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டு இச்சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீனப்படையெடுப்புக்கு சாத்தியம் இருப்பதாகக் கருதிய இந்தியா இச்சாலை அமைப்புக்கு பொருளுதவி அளித்தது.பூட்டானும் தனது நாட்டுத் தொழிலாளர்களை இச்சாலை அமைப்பிற்காக பயன்படுத்தியது, இதைத்தவிர டாசிகாங்குடன் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள டாவாங்கை இணைக்க்கும் மற்றொரு சாலையும் அமைக்கப்பட்டது.[1]

1970 களில் சுமார் 1500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் பெரும்பாலும் மனிதர்களின் உடலுழைப்பைக் கொண்டே அமைக்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் சுமார் 2280 கிலோமீட்டர் நீளமுள்ள இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் தோராயமாக 1761 கிலோமீட்டர் சாலைகள் தார் சாலைகள் மற்றும் 1393 கிலோமீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டன. தெற்கில் உள்ள முதன்மையான நகரங்களை இணைக்கும் இத்தகைய மேற்பரப்புச் சாலைகள் அமைக்கப்பட்ட போதிலும், மலைப்பாங்கான மற்ற இடங்களில் இருந்து பயணம் செய்து ஒரு சம்வெளியிலிருந்து அடுத்த சமவெளிக்குச் செல்வது கடினமாக இருந்தது. பெரும்பாலான சாலைகள் ஆற்றுச் சமவெளிகளில் இருந்தன. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பூட்டானின் பொதுப்பணித் துறையும் இந்திய எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவனமும் இணைந்து 1000 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலைகளை அமைக்கவும் மேம்படுத்தவும் திட்டமிட்டன. மற்றும் இத்திட்டத்தில் ஐந்து பிரதான ஆற்றுச்சமவெளிகளுக்கு 1992 ஆம் ஆண்டுக்குள் இணைப்புச் சாலைகள் அமைக்கும் திட்டமும் இருந்தது. மோட்டார் வாகன சாலைகள் அமைப்பது மட்டுமின்றி 4500 குடியேற்றப்பகுதிகளை இணைக்கும் 2500 கிலோமீட்டர் நீளம் கொண்ட கோவேறு கழுதைகள் நடப்பதற்கான நடைபாதைகளும் அமைக்க வேண்டிய தேவையும் பூட்டானுக்கு இருந்தது.[1]

சாலைப் போக்குவரத்து தொகு

•மொத்தம்: 8,050 கி.மீ (5,000 மைல்)[2]

•செப்பனிட்டவை 4,991 கி.மீ (3,101 மைல்)[2]

•செப்பனிடாதவை 3,059 கி.மீ (1,901 மைல்) (2003)[2]

1962 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலையே நாட்டின் முதன்மையான சாலை ஆகும். இது உள்ளூரில் பக்கவாட்டுச் சாலை என்று அழைக்கப்படுகிறது. இச்சாலை, தென்மேற்கு இந்திய எல்லையில் உள்ள புவண்ட்சோலிங்கிலிருந்து தொடங்கி கிழக்கிலுள்ள திராசிகாங்கில் முடிவடைகிறது. இச்சாலையின் நீட்சிகள், பேரோ, திம்பு மற்றும் புனாகா போன்ற பிரதான நகரங்களை இணைத்துச் சென்றன. பக்கச்சாலைகள் நிலையாக 2.5 மீட்டர் அகலம் கொண்டவைகளாகவும் இருபக்கப் போக்குவரத்திற்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டன. இமய மலையின் மத்தியப்பகுதியில் அகலச் சாலைகள் அமைப்பது அந்நேரத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புத் தடைகள், சாலைக் குறியீடுகள், ஒழுங்குபடுத்தும் வழிகாட்டிகள் முதலியன அடர்த்தியற்று அமைக்கப்பட்டிருந்தன. மோதல் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக போக்குவரத்தின் வேகம் மிகவும் குறைவாக (மணிக்கு 15 கிலோமீட்டர்) இருந்தது. செங்குத்தான மலைப்பகுதிப் பாதைகள் மிகக் கொடூரமானவை என்பதால் விபத்துகள் அடிக்கடி ஏற்பட்டன. பேரோ விமானநிலையம் மற்றும் திம்பு இடையிலான சாலை சமீபத்தில் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 வார்ப்புரு:Country study
  2. 2.0 2.1 2.2   This article incorporates public domain material from the த வேர்ல்டு ஃபக்ட்புக் document "Bhutan" (retrieved on 2011-07-25).

வெளியிணைப்புகள் தொகு

  • "Bhutan Department of Roads". Ministry of Works & Human Settlement, Government of Bhutan. Archived from the original on 2002-03-10. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.
  • "Bhutan Road Safety and Transport Authority (RTSA)". Government of Bhutan. பார்க்கப்பட்ட நாள் 2011-07-26.