பூவிக்கிரமராயன்

பூவிக்கிரமராயன் கங்க வம்சத்தின் 11வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை சாலிவாகன சகம் 461 சித்தார்த்தி வருடம் என அறுதியிட்டுக் கூறுகிறது. இவர் திருவிக்கிரமராயனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி. [1]

தலவனபுரம் தொகு

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், இவன் காலத்தில் யானைப் படையை ஏற்படுத்தி அதன் சக்தியால் பல தேச மன்னர்களை வென்றும் அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், சிறிது காலத்தில் கப்பம் கொடுக்காததால் நால்வகைப் படையுடன் சேர, சோழ, பாண்டிய, ஆந்திர, கலிங்க, மராட, மகாராஷ்டிர தேசங்களை வென்று அதன் மூலமாக கிடைத்தப் பெரும் தொகையைக்கொண்டு தலவனபுரக்கோட்டையை நன்றாக கட்டியதாக அறியமுடிகிறது.[2]

பட்டம் தொகு

பூவிக்கிரமராயன் மிகச் சிறந்த போர் வீரனாக விளங்கினான். இவன் யானைப் படையை ஏற்படுத்தி ஆட்சி செய்ததால் கஜபதி என மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.[3]

சான்றாவணம் தொகு

  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-104)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-104)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

ஆதாரங்கள் தொகு

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவிக்கிரமராயன்&oldid=2388525" இலிருந்து மீள்விக்கப்பட்டது