பெருஞ்சாணி அணை

பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.[1] இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு சுற்றுலாத்தலமாகும். இவ்வணை 1948 இல் தொடங்கப்பட்டு 1958இல் கட்டி முடிக்கப்பட்டது. 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த அணையில் உண்டாக்கப்பட்ட நீர்த்தேக்கம் 33.34 சதுர மைல் பரப்பாகும். இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும். இந்த அணை முன்னாள் முதலமைச்சா் காமராஜா் காலத்தில் கட்டப்பட்டது.

பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை
பெருஞ்சாணி அணை is located in தமிழ் நாடு
பெருஞ்சாணி அணை
Location of பெருஞ்சாணி அணை in தமிழ் நாடு
அதிகாரபூர்வ பெயர்பெருஞ்சாணி அணை
நாடுஇந்தியா
அமைவிடம்கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
திறந்ததுடிசம்பர் 1952
உரிமையாளர்(கள்)தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதார அமைப்பு
அணையும் வழிகாலும்
வகைStraight Gravity Masonry dam with concrete Spillway
தடுக்கப்படும் ஆறுபறளியாறு, a tributary of Tamiraparani River
உயரம்36.27 மீட்டர்கள் (119.0 அடி) above foundation
நீளம்308 மீட்டர்கள் (1,010 அடி)
வழிகால்கள்One
வழிகால் அளவு894.91 m3 (31,603 cu ft) per second
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்பெருஞ்சாணி அணை
மொத்தம் கொள் அளவுLive storage 818,400,000 m3 (2.890×1010 cu ft)
நீர்ப்பிடிப்பு பகுதி158.4 சதுர கிலோமீட்டர்கள் (61.2 sq mi)

ஆதாரங்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருஞ்சாணி_அணை&oldid=3630965" இலிருந்து மீள்விக்கப்பட்டது