பேச்சு:இல. செ. கந்தசாமி

இந்தக் கட்டுரையைத் துவங்குவதற்குப் பெருமைப்படுகிறேன். இவர் என் அப்பாவின் மானசீக வழிகாட்டியாக இருந்தவர். நான் சிறுவனாக இருந்த போது அப்பா இவரது கூட்டங்களுக்குச் சென்று வந்தது நினைவுள்ளது. அவரது மறைவின் போது அப்பா துயருற்றதும் நினைவில் உள்ளது. எங்கள் வீட்டின் மேசையில் எப்போதும் இவரது படம் இருக்கும். அதை நான் கோட்டோவியமாகக் கூட வரைந்து பார்த்திருக்கிறேன். இவர் மறைந்து இத்தனை காலமாகியும் அவர் தொடங்கிய தன்னம்பிக்கை இதழ் தொடர்ந்து வெளிவருவது அவரின் ஆளுமைக்கு ஒரு சான்று. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த இதழை வாங்கி வருகிறோம். கோவையின் பல புத்தகக் கடைகளில் இந்த இதழைக் காணலாம். இவரின் பல புதினங்களையும் படித்துள்ளேன். --இரவி (பேச்சு) 20:54, 13 மே 2013 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இல._செ._கந்தசாமி&oldid=1421288" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இல. செ. கந்தசாமி" page.