பேச்சு:க. து. மு. இக்பால்

க. து. மு. இக்பால் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

எனக்கு கவிஞர் இக்பால் அவர்கள் தந்திருந்த தகவல்களையும் அவர் வெளியிட அனுமதித்த செய்திகளைத்தான் நான் இங்கு பதிவு செய்திருந்தேன். யாரோ அடையாளம் தெரியாத பயனர் ஒருவர் (218.186.8.13 என்னும் இணைய முகவரியுடன்) சில பகுதிகளை நீக்கியிருக்கின்றார். மீண்டும் இப்பதிப்பை முன்னிலை ஆக்கலாமா? --செல்வா 17:43, 18 ஜூலை 2009 (UTC)

செல்வா, இக்கட்டுரையின் வரலாற்றில் பல மாற்றங்கள் பலரால் செய்யப்பட்டுள்ளன. அடையாளம் தெரியாதவர் நீக்கியது "தமிழ்நாட்டின் சிறந்த வாழும் கவிஞர்களில் ஒருவர். இவர் தமிழ்நாட்டில் கடையநல்லூரில் 1941 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர்." என்ற பகுதியை மட்டும் நீக்கியுள்ளார். ஏனைய மாற்றங்கள் சரியானதாகவே தெரிகின்றது. நீக்கிய அந்தப் பகுதிகளை மட்டும் மீண்டும் சேர்க்கலாம் என்றே கருதுகிறேன்.--Kanags \பேச்சு 22:33, 18 ஜூலை 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:க._து._மு._இக்பால்&oldid=4081088" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "க. து. மு. இக்பால்" page.