பேச்சு:சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு

Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by மு.மயூரன்

//2005ம் ஆண்டளவில் // எனும் தகவலை, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் நீக்கியுள்ளேன். --மு.மயூரன் (பேச்சு) 08:17, 26 சனவரி 2015 (UTC)Reply

சுண்ணாகம் நிலத்தடி நிர் மாசடைவு” ”என எழுதுவதூடாக, யாழ்குடாவில் சுன்னாகம் என்ற கிரமத்தில் மாத்திரம்தான் இந்தப் பிரச்சினை உள்ளது என்ற பிழையான கருத்தினைத்தான் உருவாக்குகிறது. இப்பிரச்சினை வலி வடக்கு, வலி தெற்கு, வலி மேற்கு, வலி கிழக்கு, ..... என வலிகாமத்தின் சகல பகுதிகளிலும் உள்ளது. ஆகவே, தயவு செய்து இது பற்றி எழுதும்போது, ”வலிகாமத்தின் குடிநீர்ப் பிரச்சினை” என எழுதுவதே சரியானது.இது பிழையான, திசை திருப்பலான ஒரு பிரசாரம் ஆமற்கொள்ளப்படுவதைத்தான் காட்டுகிறது! Abimanasingham Sitthawatthai Uthayakumar என்பவரின் கருத்து, முகநூலில் இருந்து....., மேலும் இங்கும் பார்க்க, பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு: சுன்னாகம், இணுவில், ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, இளவாலை, சண்டிலிப்பாய், கொக்குவில், கோப்பாய், நீர்வேலி, மாவிட்டர்புரம், கூவில், நீள்கிறது...., சரியான தலைப்பிடல் தேவை.... கவனிக்க.!!! --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:42, 13 பெப்ரவரி 2015 (UTC)
குடிநீர்ப் பிரச்சினை யாழ்குடா நாடு முழுவதுமே உள்ள பிரச்சினை. தீவுப்பக்கங்களில் இது இன்னும் மோசமாக உள்ளது. குடிநீர்ப் பிரச்சினை பற்றி எழுத வேண்டுமானால் யாழ் குடாநாட்டுக் குடிநீர்ப் பிரச்சினை எனத் தனியே ஒரு கட்டுரை எழுதலாம். அண்மையில் இப்பிரச்சினையைத் தீர்க்க வட மாகாணசபை கிளிநொச்சியில் இருந்து ஆற்று நீரைத் திருப்பி விட முயற்சி எடுத்திருந்தது. ஆனால், சுன்னாகத்தில் தோன்றிய பிரச்சினை வேறு. சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையமே இதன் முக்கிய காரணி. சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்ததால் உருவானது. கட்டுரைத் தலைப்பு சரியானதே. சுன்னாகத்தில் தோன்றிய இப்பிரச்சினை அதனை அண்டிய வலிகாமத்தின் பல இடங்களுக்கும் பரவியிருக்கலாம். எனினும் இப்போதைய தலைப்பே சரியானது. மு.மயூரன் கவனத்திற்கு.--Kanags \உரையாடுக 22:11, 13 பெப்ரவரி 2015 (UTC)

சுண்ணாகம் நிலத்தடி நிர் மாசடைவு” ”என எழுதுவதூடாக, யாழ்குடாவில் சுன்னாகம் என்ற கிரமத்தில் மாத்திரம்தான் இந்தப் பிரச்சினை உள்ளது என்ற பிழையான கருத்தினைத்தான் உருவாக்குகிறது. இப்பிரச்சினை வலி வடக்கு, வலி தெற்கு, வலி மேற்கு, வலி கிழக்கு, ..... என வலிகாமத்தின் சகல பகுதிகளிலும் உள்ளது. ஆகவே, தயவு செய்து இது பற்றி எழுதும்போது, இலங்கை வலிகாமத்தின் குடிநீர்ப் மாசு அடைந்த பிரச்சினை” என எழுதுவதே சரியானது பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் வருமாறு: சுன்னாகம், இணுவில், ஏழாலை, மல்லாகம், தெல்லிப்பழை, கட்டுவன், அளவெட்டி, இளவாலை, சண்டிலிப்பாய், கொக்குவில், கோப்பாய், நீர்வேலி, மாவிட்டர்புரம், கூவில், நீள்கிறது...., சரியான தலைப்பிடல் தேவை.

Return to "சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு" page.