பேச்சு:திருக்கோவையார்

திருக்கோவையார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


நீக்கப்பட்ட பகுதிகள் தொகு

//"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்."//


//"ஆய்ந்த கலித்துறை தான் நானூறு அகப்பொருண் மேல், வாய்ந்த நற்கோவையாம்" - வச்சநந்திமாலை.//

இவை கட்டுரையில் ஏன் இடம் பெருகின்றன எனபதைக் கூறி மேலதிக விபரங்களுடன் மீண்டுன் இணைக்கலாம். தற்போதைய நிலையில் ஒன்றும் தெளிவில்லை.--டெரன்ஸ் \பேச்சு 05:44, 20 மார்ச் 2007 (UTC)

இவை திருக்கோவையாரின் பெருமையை உணர்த்தவந்த உசாத்துணைகள் திருக்குறள், நால்வேத முடிவு, சேரசோழபாண்டியரின் தமிழும், முனிவர்ர்கள் மொழியும், திருக்கோவையாரும், திருவாசகமும், திருமந்திரமும் ஒரு வாசகமே.

நானூறு அகப்பொருள் பாடல்களைக் கொண்டது நல்ல திருக்கோவையாம்.--ஞானவெட்டியான் 06:00, 20 மார்ச் 2007 (UTC)

நீக்கப்பட்ட பகுதிகள் ஞானவெட்டியானின் விளக்கத்துடன் மீண்டும் சேர்த்துள்ளேன். இவ்விளக்கம் போதுமானவை என்று நினைக்கிறேன்.--Kanags 10:57, 20 மார்ச் 2007 (UTC)
ஞானவெட்டியான், மூவர் தமிழ் என்பது தேவார மூவர் தமிழ். உங்கள் கருத்தைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். --செல்வா 13:12, 20 மார்ச் 2007 (UTC)

அப்படியே ஆகட்டும்.--ஞானவெட்டியான் 15:11, 20 மார்ச் 2007 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருக்கோவையார்&oldid=3695545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருக்கோவையார்" page.