பேச்சு:ப. தங்கம்

Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம்

ப.தங்கம் எழுதியுள்ள கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) நூலின் வெளியீட்டு விழா இன்று (24 சூலை 2016) காலை தஞ்சாவூரில் நடைபெற்றது. 110 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் பொன்னியின் செல்வன் நூலின் முதல் 11 அத்தியாயங்களை சித்திரக்கதையாக வழங்கியுள்ளார் நூலாசிரியர். தற்பொழுது எனது தளத்தில் இந்நூலை இன்று அறிமுகப்படுத்தியுள்ளேன். விக்கி விதிகளின்படி எனது தளத்திலிருந்து பதிவை இணைக்க முடியாததால் இணைக்கவில்லை. பின்னர் வேறு ஏதாவது பொருத்தமான இணைப்பு கிடைத்ததும் இந்நூலுக்கான இணைப்பினை மேற்கோளாக இணைப்பேன். பொன்னியின் செல்வனை சித்திரமாகக் கொண்டுவரும் அரிய முயற்சியைப் பதியவேண்டும் என்ற நன்னோக்கில் இந்நூல் பற்றிய பதிவு இணைக்கப்பட்டது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:03, 24 சூலை 2016 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ப._தங்கம்&oldid=2093517" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ப. தங்கம்" page.