போலுப்பள்ளி வனவியல் விரிவாக்க மையம்

கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள வனவியல் மையம்

போலுபள்ளி வனவியல் விவாக்க மையம் என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 7 இல் போலுப்பள்ளி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு வனவியல் விரிவாக்க மையம் ஆகும். இந்த மையம் 1988 ஆகத்து 12 அன்று வனவிக்ஞான் கோத்ரா என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் அதன் பின்னர் 1998 அக்டோபர் 11 அன்று வனவியல் விரிவாக்க மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

செயல்பாடுகள் தொகு

இந்த மையத்தில் சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளும், அதை வைத்து பராமரிக்க முறையான பயிற்சி மற்றும் கன்றுக்கு ஊக்கத்தொகை அளித்தல் போன்ற பணிகளையும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயர் தொழில் நுட்ப நாற்றங்கால்கள் உற்பத்தி போன்றவை குறித்து இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "இயற்கை உரம் தயாரிக்க இலவச பயிற்சி". செய்தி. தினமலர். 27 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 28 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)