மகடூஉ முன்னிலை (நூல்)

மகடூஉ முன்னிலை முனைவர் தாயம்மாள் அறவாணன் எழுதிய ஒரு நூல் ஆகும். சங்க இலக்கியங்களை எழுதிய 473 புலவர்களில் 45 புலவர்கள் பெண்பால் புலவர்கள். இவர்களில் ஆதிமந்தி முதல் ஆண்டாள் வரையானவர்கள் அடங்குவர். இப்புலவர்களுடைய ஆக்கங்களின் சிறப்பு, அவர்களின் வரலாறு, பெயர்க்காரணம் முதலிய விபரங்களையும், ஆக்கங்களையும் தொகுத்துத் தருகிறது இந்நூல்.


680 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 2004 ஆம் ஆண்டில் முதற் பதிப்பாகச் சென்னையில் இருந்து வெளிவந்தது. பச்சைப்பசேல் பதிப்பகத்தினர் இதனை வெளியிட்டு உள்ளனர்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகடூஉ_முன்னிலை_(நூல்)&oldid=1373115" இலிருந்து மீள்விக்கப்பட்டது