மகண் மறுத்தல்

பண்டைய காலங்களில் ஒரு சாதியினர் பிற சாதியினருடன் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. இது போன்ற நிலையில் ஆளும் அல்லது அதிகார நிலையிலுள்ள சாதியினர் தங்களுக்குக் கீழாக இருக்கும் சாதியிலிருக்கும் பெண்களின் அழகில் மயங்கி அவர்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி பெண் கேட்பர். கீழ் நிலையிலிருக்கும் சாதியினர் அதிகார சாதியினருக்குப் பெண் தர மறுத்து (மகண் மறுத்து) அந்த இடத்தை விட்டு இடம் பெயர்ந்து சென்று விடுவர். சில வேளை இடம் பெயர முடியாத நிலையில் அந்தப் பெண்ணைக் கொன்று தங்கள் சாதியின் நிலையைக் காத்துக் கொள்வதாகச் செய்து கொள்வதுமுண்டு. மகண் மறுத்தல் நிலையே தமிழ்நாட்டிலுள்ள பல சாதியினரின் குல தெய்வ வழிபாட்டுக்கு மூலக்கதைகளாக இருக்கின்றன.[சான்று தேவை]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகண்_மறுத்தல்&oldid=1235048" இலிருந்து மீள்விக்கப்பட்டது