மகாராணி திவ்யா சிங்

இந்திய அரசியல்வாதி

மகாராணி திவ்யா சிங் (Maharani Divya Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையின் முன்னாள் உறுப்பினர் என்று அறியப்படுகிறார். பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக இராசத்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மகாராணி திவ்யா சிங் Maharani Divya Singh
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–1998
முன்னையவர்கிருசுணேந்திர கௌர் (தீபா)
பின்னவர்கே. நட்வர் சிங்
தொகுதிபரத்பூர், இராசத்தான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு( 1963-11-06)6 நவம்பர் 1963
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்விசுவேந்திர சிங்
பிள்ளைகள்யுவராச்சு அனிருத்தா பரத்பூர்
தொழில்அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மகாராணி திவ்யா சிங் 1963 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் இலக்னோவில் பிறந்தார். பிப்ரவரி 15, 1989 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று இவர் மகாராச்சு விசுவேந்திர சிங்கை மணந்தார். [1]

கல்வி & தொழில் தொகு

இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் திவ்யா கலை பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 1996 ஆம் ஆண்டில் பரத்பூர் மாவட்ட மன்றத்தில் உறுப்பினரானார். பின்னர், 11 ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] 2012 ஆம் ஆண்டில் திவ்யா தனிப்பட்ட காரணங்களுக்காக 2011 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இராசத்தான் பொது சேவை ஆணையத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து பதவி விலகினார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Biographical Sketch Member of Parliament 11th Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  2. "Congress-Jat rift widens in Rajasthan: Bharatpur's Maharani Divya Singh quits Rajasthan Public Service Commission".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராணி_திவ்யா_சிங்&oldid=3885904" இலிருந்து மீள்விக்கப்பட்டது