மட்டக்களப்புக் கோட்டை

மட்டக்களப்புக் கோட்டை அல்லது மட்டக்களப்பு இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) அல்லது மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டை என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது.[1] இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது.

மட்டக்களப்புக் கோட்டை
பகுதி: மட்டக்களப்பு
மட்டக்களப்பு, இலங்கை
மட்டக்களப்பு போர்த்துக்கீச கோட்டையின் ஒருபக்கத் தோற்றம். கச்சேரி இங்கு அமைந்துள்ளது
மட்டக்களப்புக் கோட்டை is located in இலங்கை
மட்டக்களப்புக் கோட்டை
மட்டக்களப்புக் கோட்டை
ஆள்கூறுகள் 7°42′43″N 81°42′09″E / 7.711901°N 81.702377°E / 7.711901; 81.702377
வகை பாதுகாப்பு கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை அரசாங்கம்
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை நன்று
இட வரலாறு
கட்டிய காலம் 1628, 1638
பயன்பாட்டுக்
காலம்
1628 -
கட்டியவர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கருங்கல், பாறை
காவற்படைத் தகவல்
தங்கியிருப்போர் இலங்கை அரச நிர்வாகம்

காலவரிசை தொகு

ஐரோப்பியர் கால மட்டக்களப்புக் கோட்டையின் காலவரிசை.[2]

  • 1622 – போர்த்துக்கேயரால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது
  • 1628 – கட்டுமானம் நிறைவுற்றது
  • 1638 – ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்டது
  • 1639 – ஒல்லாந்தரால் கோட்டை அழிக்கப்பட்டது
  • 1665 – மீள் கட்டுமானம் ஆரம்பமாகியது
  • 1682 – செப்பணிடப்பட்டது
  • 1707 – முன் கொத்தளமும் மேற்பகுதியும் கட்டி முடிக்கப்பட்டது
  • 1766 – கண்டிய அரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது
  • 1796 – பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது

படங்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

உசாத்துணை தொகு

  1. WMF Program
  2. "The "Dutch fort" - Batticaloa". Ministry of Public Administration & Home Affairs and District Secretariat, Batticaloa. Archived from the original on 27 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 31 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்களப்புக்_கோட்டை&oldid=3909490" இலிருந்து மீள்விக்கப்பட்டது