இலங்கையின் கோட்டைகள் என்னும் தலைப்பைக் கொண்ட இப்பக்கம், இலங்கை அந்நியர் ஆட்சிக்குட்பட முன்னர் நிர்மானிக்கப்பட்ட கோட்டைகள் முதற்கொண்டு, இலங்கையின் கரையோரப் பகுதிகளைப் போத்துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் ஆண்ட காலத்தில் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிய அல்லது பயன்படுத்திய கோட்டைகளின் பட்டியலைத் தருகின்றது. 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் மையப் பகுதி தவிர்ந்த பெரும்பாலான கரையோரப் பகுதிகள் போத்துக்கீசரின் அல்லது ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் இருந்தன. இப்பகுதிகள் போத்துக்கீசர் ஆளுகையின் கீழ் இருந்தபோது முக்கியமான இடங்களில் போத்துக்கீசரின் கோட்டைகள் இருந்தன. அவற்றைக் கைப்பற்றிய ஒல்லாந்தர் அவற்றில் சிலவற்றைத் திருத்திப் பயன்படுத்தினர், வேறு சிலவற்றை முற்றாக இடித்துப் பெரும்பாலும் அதே இடத்தில் புதிய கோட்டைகளைக் கட்டிக்கொண்டனர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் புதிய கோட்டைகள் கட்டப்படாவிட்டாலும் பழைய கோட்டைகளில் சிலவற்றை அவர்கள் பேணிப் பயன்படுத்தி வந்தனர்.[1]
↑Royal Palace. Briefly used as an outpost of the கண்டி இராச்சியம் in the 16th and 17th centuries.
↑Located to the south of சிகிரியா is the Mapagala Fortress (‘Rock of the Viceroy’), a fortress with massive stone walls, which was built prior to Sigiriya.
↑Later controlled by the Dutch and then the British