ஊர்காவற்றுறைக் கோட்டை

ஊர்காவற்றுறைக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த வேலணைத்தீவு என்னும் தீவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் ஒன்றே வேலணைத்தீவு. கோட்டை தீவின் வடக்கு முனையை அண்டிய கரையோரத்தில், பாக்கு நீரிணைப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தை அண்டிய நீரேரிக்குள் நுழையும் ஒடுங்கிய கடற் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் உள்ளது. சில இடிபாடுகளே எஞ்சியுள்ளன[1]. இக்கோட்டை முதலில் போத்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம் ஒல்லாந்தரால் கைப்பற்றப்பட்ட போது ஊர்காவற்றுறைக் கோட்டையும் ஒல்லாந்தர் வசமானது.

ஊர்காவற்றுறைக் கோட்டை
ஊர்காவற்றுறை
ஊர்காவற்றுறைக் கோட்டை
வகை தற்காப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை சிதைவடைந்துள்ளது
இட வரலாறு
கட்டிய காலம் 1629
கட்டியவர் போத்துக்கீசர், ஒல்லாந்தர்
கட்டிடப்
பொருள்
கிரனைட் கற்கள் மற்றும் கடற்பாறைகள்.

குறிப்புகள் தொகு

  1. Nelson, W. A., 2004. ஆர். கே. டி சில்வா புதிதாகச் சேர்த்த விவரங்கள். பக். 101b.

உசாத்துணைகள் தொகு

  • Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka - The Military Monuments of Ceylon, with up-dates by de Silva, R. K., Sri Lanka Netherlands Association, 2004. (First Published 1984).

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்காவற்றுறைக்_கோட்டை&oldid=3909483" இலிருந்து மீள்விக்கப்பட்டது