மல்வானைக் கோட்டை

மல்வானைக் கோட்டை (Malwana fort) கம்பகாவிலுள்ள மல்வானையில், களனி கங்கை கரையில் அமைந்திருந்தது. இது போர்த்துக்கேயரால் 1590 களில் கட்டப்பட்டது. அச்சிறிய கோட்டை போர்த்துக்கேய ஆளுனரின் அல்லது தலைமை தளபதியின் வசிப்பிடமாகவும் இயங்கியது.[1] ஆவனங்களின்படி, 70 படையினரைக் கொண்ட படைப்பிரிவு இக்கோட்டையில் இருந்தது. இக்கோட்டை 1630 களில் கண்டியப் படைகளினால் தாக்குதலுக்கு உள்ளானது. போர்த்துக்கேயர் இக்கோட்டைய கைவிட்டு, கொழும்புக் கோட்டையிலும் அதனுடைய பாதுகாப்பிலும் கவனஞ் செலுத்தினர்.[2]

மல்வானைக் கோட்டை
மல்வானை, இலங்கை
மல்வானைக் கோட்டை is located in இலங்கை
மல்வானைக் கோட்டை
மல்வானைக் கோட்டை
ஆள்கூறுகள் 6°55′32″N 80°01′20″E / 6.925593°N 80.022208°E / 6.925593; 80.022208
வகை பாதுகாப்புக் கோட்டை
இடத் தகவல்
நிலைமை எச்சங்கள்
இட வரலாறு
கட்டிய காலம் 1590 கள்
கட்டியவர் போர்த்துக்கேயர்

உசாத்துணை தொகு

  1. Rajpal Kumar De Silva, R. (1988). Illustrations and Views of Dutch Ceylon 1602–1796. Brill Archive. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004089792. 
  2. "Forgotten fort of Malwana". The Nation. Archived from the original on 2014-11-29. பார்க்கப்பட்ட நாள் 21 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்வானைக்_கோட்டை&oldid=3909491" இலிருந்து மீள்விக்கப்பட்டது