மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி

தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள கல்லூரி

ம. தி. தா. இந்து கல்லூரி என்று அழைக்கப்படும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி (The Madurai Diraviyam Thayumanavar Hindu College) தமிழ்நாட்டின், திருநெல்வேலியில் அமைந்துள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1879ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியானது கலை, அறிவியல், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி
குறிக்கோளுரைசெய்வன திருந்தச் செய்
வகைஅரசு உதவி
உருவாக்கம்1854
அமைவிடம், ,
இணையதளம்http://www.mdthinducollegetirunelveli.org/

கல்லூரியின் வரலாறு தொகு

இக்கல்லூரி 1854-ல் தமிழையும், அன்றைய இங்கிலாந்து ஆட்சியாளர்களின் ஆங்கிலத்தையும் ஒருங்கிணைந்து கற்றுக் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியாகத் (Anglo Vernacular School) துவக்கப்பட்டது. இப்பள்ளி 1861ஆம் ஆண்டு "இந்து கலாசாலை" என்ற பெயரில் தற்போதைய திருநெல்வேலி சந்திப்பான வீரராகவபுரத்திற்கு மாற்றப்பட்டது. 1878-ல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை முதல் முதல்வராக இருந்தபோது, ​​நிறுவனம் மீண்டும் இந்துக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கல்லூரியை இடைநிலைக் கல்லூரியாக தரம் உயர்த்தும் பொறுப்பை ஏற்றார். 1908ஆம் ஆண்டில், கல்விச் சங்கம், திருநெல்வேலி அமைக்கப்பட்டது மற்றும் இந்நிறுவனத்தின் கீழ் கல்லூரி செயல்பட்டு வந்தது.

இந்துக் கல்லூரி 1924ஆம் ஆண்டு முதல் தரக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. 1929-ம் ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. கல்லூரியும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. ராவ் ஷைப். பேராசிரியர். பழம்பெரும் கிறிஸ்தவ அதிபர் அலெக்சாண்டர் ஞானமுத்து, பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் திறமையான உதவியால் மதுரையைச் சேர்ந்த பரோபகாரி ஒருவரிடம் நிதி உதவி கோரினார். திரு. திரவியம் பிள்ளை கல்லூரிக்கு ஒரு லட்சம் ரூபாயினை 1936-ல் வழங்கினார். இவரது வேண்டுகோளின் பேரில், நன்கொடையாளர் மற்றும் அவரது உறவினரின் பெயர்களுடன் "மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி" என்று பெயரிடப்பட்டது. 1979ஆம் ஆண்டு தனது நூற்றாண்டு விழாவையும், 2004ஆம் ஆண்டு நூற்றாண்டுக்குப் பின் வெள்ளி விழாவையும் (125) கொண்டாடிய கல்லூரி, அதன் 150வது ஆண்டை நோக்கி அணிவகுத்து வருகிறது.

முத்தமிழ் வளர்த்த கல்லூரி தொகு

இயல், இசை மற்றும் நாடகம் என்ற முத்தமிழையும் போற்றி வளர்த்தது இக்கல்லூரியாகும். தமிழ் சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன், புதினங்களின் முன்னோடியான அ.மாதவையா, அறிவியலைத் தமிழில் அறிமுகம் செய்த பெ.நா.அப்புசாமி, தமிழ்ப்பண்ணை அமைத்த இரசிகமணி டி.கே.சிதம்பரம், ஆராய்ச்சிமணி வையாபுரிப்பிள்ளை ஆகியோரால் இக்கல்லூரி ஏற்றம் பெற்றது.தமிழில் அமைந்த கவிதை நாடகம் என்ற பெருமையுடைய “மனோன்மணியம்” படைத்து அளித்த பெருமையும், இந்து உயர்நிலைப் பள்ளியினை இந்துக் கல்லூரியாக மாற்றி பின்னாளில் அதன் முதல்வராகவும் பணியாற்றிய பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்களைச்சாரும். தமிழ்த்தாய்க்கு வாழ்த்துப் பாடி தமிழை மனோன்மணியம் சுந்தரனார் போற்றி வளர்த்தார்.

கல்லூரியின் குறிக்கோள் (Motto) தொகு

இக்கல்லூரியின் குறிக்கோள் “ஏஜ் கோடு அஜிஸ் (Age quod agis)" என்பதாகும். இது ஓர் இலத்தின் வாக்கியம். இதன் பொருள் “செய்வன திருந்தச் செய்” ஆகும். (whatever you do, do it perfectly).

கல்லூரியின் கடவுள் வாழ்த்து தொகு

இராமலிங்கஅடிகளார் எழுதிய

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
சண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

எனும் பாடலாகும். இப்பாடல் ஒருவன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் எப்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனைக் கூறுகிறது.

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • விலங்கியல்

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வரலாறு
  • உடற்கல்வி
  • நூலக அறிவியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-13. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help)