மந்திரா பேடி

இந்திய நடிகை

மந்திரா பேடி (Mandira Bedi, பிறப்பு: ஏப்ரல் 1972) ஒரு இந்திய பாலிவுட் நடிகையாவார்.[1] இவர் ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷன்னில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார்.

மந்திரா பேடி

பிறப்பு ஏப்ரல் 15, 1972 (1972-04-15) (அகவை 51)
மும்பை, இந்தியா
தொழில் நடிகை, தொகுப்பாளர்
துணைவர் ராஜ் கவுஷல்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

மந்திரா பேடியின் பிறப்பிடம் மும்பையாகும். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 11 கிலோமீட்டர்களில் உள்ள பஞ்சாபின் ஒரு நகரமான பஸ்ஸில்காவின் காட்ரி குலத்தை அவரது பரம்பரையின் மூலமாகக் கொண்டுள்ளார். மும்பையின் கேத்ட்ரல் அண்ட் ஜான் கொனான் பள்ளியில் அவர் கல்வி பயின்றார்.

தொழில் வாழ்க்கை தொகு

"சாந்தி" தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார். மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் "மோனா" என்றழைக்கப்பட்ட "மந்திரா" முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார்.

சொந்த வாழ்க்கை தொகு

14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

உசாத்துணை தொகு

  1. "LFW 2014: Neha Dhupia stuns on the ramp, Mandira Bedi makes her ramp debut as designer". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 20 March 2014.

புற இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mandira Bedi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரா_பேடி&oldid=2783903" இலிருந்து மீள்விக்கப்பட்டது